உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-3
அத்தியாயம்-3 “ எ ந்த ஜான்சி ராணியா இருந்தாலும் அடக்கி காட்டறவன் தான் இந்த ஆதித்யா...இவள் எம்மாத்திரம்?? ... இவளை எப்படி அடக்கி காட்டறேன் பார் “ என்று மனதினில் சூளுரைத்தான் ஆதித்யா... அவன் உடல் விரைத்து முகம் கடினமாகியது ஒரு சில மணித்துளிகள்.. அதற்குள் தன்னை சமாளித்து கொண்டு உடனேயே இயல்பு நிலைக்கு மாறினான்.. அவன் முக மாற்றத்தை சரண்யாவும் கவனித்தாள்.. ஆனால் அவன் முகம் உடனே மாறியதால், தான் கண்டது நிஜமா என்ற சந்தேகம் அவளுள்ளே... “அப்படியா!!! நல்ல வேளை சிஸ்டர்.. முன்னாடியே சொன்னிங்க.. நான் பாட்டுக்கு இவ பவர் தெரியாமல் ஏதாவது செய்ய போய் என் கையை காலை உடைச்சிட போறா.. இனிமேல் எச்சரிக்கையாக இருந்துக்கறேன் “என்று பயந்தவன் போல நடித்தான் ஆதித்யா.. “அது!! .. இந்த பயம் போதும் ப்ரதர்.. நீங்க பொழச்சுக்குவீங்க “ என்று சரண்யாவும் சிரித்தாள்.. “ஏ குரங்கு.. எவ்வளவு நாள் திட்டம் என்னை இப்படி பழி வாங்க “ என்று சரண்யாவை முறைத்தாள் பவித்ரா.. “ஐ!! அண்ணி நீங்களும் ரௌடியா??? எங்க காலேஜ்ல நானும் ரௌடி தான் “ என்று விஜய் சேதுபதி மாதிரி இழுத்து கூறினாள் அருகில் நின்ற ஜனனி !! “நீ ரௌட...