Posts

Showing posts from January, 2022

என்னுயிர் கருவாச்சி-20

Image
  அத்தியாயம்-20   அ டுத்த ஒரு மணி நேரத்தில் , பேருந்து திருச்சியின் நுழைவாயிலான டோல்கேட்டில் நின்றிருக்க , அங்கயே இறங்கி கொண்டனர் இருவரும். அங்கிருந்து காட்டூர் செல்லும் பேருந்தில் ஏறி  அந்த விளையாட்டு போட்டி நடக்கும் உருமு தனலெக்ஷ்மி கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தனர்.   முதன்முதலாக தன் குடும்பத்தை விட்டு தனியாக வந்திருந்தால் ,  எங்கே இறங்குவது எப்படி காட்டூர் செல்வது என்று தவித்திருப்பாள் பூங்கொடி.   ஆனால் ராசய்யா உடன் வரவும் , அவனே காட்டுர் செல்லும் பேருந்தை நிறுத்தி  அந்த பேருந்தில்   இவளையும் அழைத்துக்கொண்டு இயல்பாக ஏறி இருக்க , அவளுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. “ இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் ? முன்னரே இங்க வந்திருப்பானோ ? ” என்று யோசிக்க ,  அவள் மனதை படித்தவனாய்     “ஒவ்வொரு இடத்துக்கும் போய் பார்த்து தான் இடம் தெரியணும்னு இல்ல கருவாச்சி. உன் அளவுக்கு படிக்கவில்லை என்றாலும் நானும் கொஞ்சமாச்சும்  எழுத படிக்க தெரிஞ்சிருக்கேன்.  பஸ் நம்பரையும்  அது போகும் ஊரையும் படிக்கும் அளவுக்கு கொஞ்சம் ஞானம் இருக்குதான்...” என்று சிரித்தான். ***** அ டுத்த கொஞ்ச நேரத்தில்

நிலவே என்னிடம் நெருங்காதே-43

Image
  அத்தியாயம் -43 மூ ணாறு , தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தளமாகும்... முதிரப்புழா , நல்லத்தண்ணி மற்றும் குண்டலா என்னும் மூன்று ஆறுகள்  சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் இதற்கு மூணாறு என்று பெயர் வந்ததாக கூறுவார்கள்..   கண்ணுக்கு இனிய பள்ளத்தாக்குகள் , எண்ணற்ற நீரோடைகள் , பெரிய பெரிய நீர்வீழ்ச்சிகள் , பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்து வளைந்து செல்லும் நடைபாதைகள் என இயற்கை அழகு கொட்டி கிடக்கும் ஒரு ரம்மியமான இடமாகும் மூணாறின் இன்னொரு சிறப்பு குறிஞ்சி மலர்கள்... பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் அரிய மலரான குறிஞ்சி மலர்கள் இங்கே கொட்டி கிடக்குமாம்.. மூணாறில் ”குறிஞ்சிப்பருவம்” ஒரு கண்கொள்ளாக்காட்சி … இந்த பருவத்தில் மலைகளும் பள்ளத்தாக்குகளும் என எங்கு பார்த்தாலும் குறிஞ்சி மலர்களால் நிறைந்திருக்கும்.. அதிரதன் காரிலயே மூணாறில் முக்கிய பகுதிகளை கண்டு களித்தனர்.. ஒவ்வொரு இடமும் மனதை அள்ளியது..இரு ஜோடிகளுமே வெகு இயல்பாக கதை அடித்து கொண்டு ஒவ்வொரு இடங்களையும் சுற்றி பார்த்தனர்.. அதிரதன் சொல்லிய அறிவுரைப்படி அவர்கள் முன்னால் நிலா ரதன் என்று அவனை அழை

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!