என் மடியில் பூத்த மலரே-22
அத்தியாயம்-22 நான்காம் மாதம்: அ ன்று காலை வழக்கம்போல அலுவலகம் செல்ல கிளம்பி வந்த ஆதி காலை உணவை உண்டு கொண்டிருந்தான்... ஜானகி அவனுக்கு எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்... எதேச்சையாக அவன் முகத்தை கண்டவர் அவன் ஏதோ யோசனையில் இருப்பதும் ஏதோ கேட்க வருவதும் பின் தயங்குவதும் புரிந்தது.. சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் பின் தானாகவே அவனிடம் “என்னாச்சு கண்ணா?? .. ஏதாவது பிரச்சனையா.. ஒரே யோசைனயா இருக்க ?? “ என்று ஆரம்பித்தார்... அவர் கேள்வியில் விழித்தவன் அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டு “ஆமா மா.. ஒரு சின்ன பிரச்சனை.. அதத்தான் எப்படி சமாளிப்பது என்று யோசித்து கொண்டிருந்தேன்.. “ என்று சமாளித்து சிரித்தான்... “சரி மா... அப்புறம் உங்க பேத்தியை செக்கப் பண்ண இந்த மாதம் போகணும் இல்லையா?? சுசிலா மா எப்ப வரசொல்லி இருக்காங்க ... “என்றான் தெரியாதவனாக... ஜானகிக்கு அவனின் யோசனைக்கான காரணம் இப்பொழுது புரிந்தது.. அவன் தன்னிடம் நேராக கேட்க தயங்கிதான் இவ்வளவு நேரம் யோசிச்சுகிட்டிருந்திருக்கான்.. என்று சிரித்து கொண்டவர் “ஆமா.. கண்ணா... இன்னைக்கு மாலை போகனும்... நான் போய் பாரதிய கூ...