காதோடுதான் நான் பாடுவேன்-23
அத்தியாயம்-23 அ ந்த இனிய மாலை வேளையில் நிகிலன் காரை ஓட்டி கொண்டிருக்க, காரின் முன் இருக்கையில் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தார் சிவகாமி... பின்ன இருக்காதா?? எந்த பொண்ணை பார்த்ததும் தன் மருமகளாக வேண்டும் என்று வேண்டினாரோ அந்த பொண்ணையே அவருக்கு மருமகளாக்கி கொள்ள நிச்சயம் பண்ண சென்று கொண்டிருந்தவருக்கு அப்பயே பாதி திருமணம் முடிந்து விட்டதை போல இருந்தது... காரின் இருக்கையின் பின்னால் சாய்ந்து அமர்ந்து கொண்டவர் நேற்று நடந்த சம்பவங்களை மீண்டும் ஒரு முறை மனதில் ஓட்டி பார்த்தார்... நேற்று காலை மகிழனுடன் பேசியதும் சிறிது நேரம் யோசித்து கொண்டிருந்தார் அடுத்து என்ன செய்வது என்று.. மகிழன் மீண்டும் ஒரு முறை தன் அன்னையிடம் வற்புறுத்தி சண்முகத்திடம் பேச சொல்லி விட்டு செல்ல, அவன் அலுவலகம் சென்றதும் தன் அலைபேசியை எடுத்து சண்முகத்தை அழைத்து இருந்தார்... தன் மகனுக்கு அவர் பொண்ணை பிடித்து இருப்பதாகவும் அவர்களுக்கு பிடித்து இருந்தால் மேல பார்க்கலாம்... “ என்க சண்முகம் உச்சி குளிர்ந்து போனார்... சிவகாமி தன் மூத்த மகனை பற்றி சொல்லி அவன் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதாகவும் சின்ன மகனுக்கு...