தவமின்றி கிடைத்த வரமே-31
அத்தியாயம்-31 செ ன்னையில் பிரபலமான அந்த பெரிய திருமணம் மண்டபம் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.. அது பெரிய VIP க்கள் இல்லத்து விழாக்கள் மட்டுமே நடைபெறும் அந்த மண்டபத்தில் முதல் முறையாக மாறி வசி மற்றும் பனிமலரின் வரவேற்பு விழா அங்கு ஏற்பாடாகி இருந்தது... இந்த மண்டபத்தில்தான் வைக்கவேண்டும் என்று மித்ரா வற்புறுத்தி வசியை சம்மதிக்க வைத்திருந்தாள்.. அதோடு அந்த மண்டபத்தின் செலவையும் அவளே ஏற்று கொண்டாள் தன் நண்பனுக்கு கல்யாண பரிசாக... அதை கண்டு வசி உருகி போனான்...ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அவளின் குள்ளநரித்தனம் பாசத்தால் மூடி இருந்த அவன் கண்களுக்கு தெரியவில்லை... சென்னையின் ஒரளவுக்கு எல்லா புகழ்பெற்ற மருத்துவமனையும் வசிக்கு பழக்கம் என்பதால் எல்லா மருத்துவமனையின் MD மற்றும் அவனுக்கு தெரிந்த மருத்துவர்கள் செவிலியர்கள், வார்ட் பாய்ஸ் என கடை நிலை ஊழியர் வரை அனைவரையுமே தன் திருமண வரவேற்பு விழாவிற்கு அழைத்திருந்தான். அதோடு அவன் பள்ளி கல்லூரி தோழர்கள், ஆசிரியர்கள் என்று ஒருவர் விடாமல் ஞாபகம் வைத்து அனைவரையும் நேரிலோ வாட்ஸ்அப்பின் மூலமாக அழைத்திருந்தான்.. மீனாட்சி , சுந்தர் மற்றும் ...