தவமின்றி கிடைத்த வரமே-37
அத்தியாயம்-37 த ன் தம்பியின் பதிலை கேட்டவள் உள்ளம் குளிர்ந்து போக, “டேய்.. உன் பொறுப்புணர்வு நினைச்சு அப்படியே புல் அரிக்குது டா.. ரொம்ப சந்தோஷம் நீ இந்த அளவுக்கு யோசிக்கறியே.. அதுவும் எனக்காக இவ்வளவு யோசிச்சு பார்க்கறியே.. ரியலி ஐ ப்ரௌட் ஆ யூ.. அடுத்த ஜென்மத்திலும் நீயே எனக்கு தம்பியா வரணும்.. “ என்று சிரித்தவள் “இனி... ஆனாலும் நீ நினைக்கிற மாதிரி பெருசா ஒன்னும் எதிர்ப்பு இருக்காது.. நீ குதிரை ல வந்து தூக்கிட்டு போய் தாலி கட்டற அளவுக்கெல்லாம் போகாது.. நீ அந்த குழப்பதை விடு.. உண்மையிலயே உனக்கு வசு வை புடிச்சிருக்கா?. அவளை கல்யாணம் பண்ணி உன் பக்கத்துலயே வச்சுக்க தோணுதா? “ “ஹ்ம்ம்ம் யெஸ் யெஸ்..அதே தான் மலர்.. நான் இதுவரைக்கும் திருமணத்தை பத்தியெல்லாம் யோசிச்சதில்லை. அதற்கான வயதும் இது இல்ல. நான் இன்னும் மாஸ்டர் படிச்சு நல்ல ஒரு பொசிசனுக்கு வரணும்.. ஆனால் அப்படி ஒரு பொசிசினுக்கு வந்த பிறகு என் பெர்சனல் சைட் பார்த்தால் எனக்கு துணைவியா எண்ணி பார்த்தால் வசு தான் முன்னாடி வந்து நிக்கறா.. அப்படி பார்த்தால் அவளை தவிர்த்து வேற ஒருத்தியை என பக்கத்துல நிறுத்தி பார்க்க முடியலை.. சோ... இப்...