Posts

Showing posts from March, 2020

தவமின்றி கிடைத்த வரமே-45

Image
அத்தியாயம்-45 ஏ தோ ஒரு மாய லோகத்தில் சஞ்சரித்தனர் இருவரும்... அவர்களின் மோன நிலையை பொறுக்காமல் வெளியில் மக்கள் நடமாடும் சத்தம் கேட்க, அதில் விழித்து கொண்டவன் மனமே இல்லாமல் அவள் இதழை விடுவித்தான்.. “சோ ஸ்வீட் ஹனி... தேங்க்யூ சோ மச்... சீக்கிரம் மாமாகிட்ட சொல்லி நாள் பார்க்க சொல்லலாமா? இது நாள் வரை காத்திருந்தது போதும்.. இனிமேலும் உன்னை பிரிந்து என்னால் காத்திருக்க முடியாது.. “ என்றான் தாபத்துடன்.. அவனை பார்த்தால் அன்றுதான் அதுவும் 5 நிமிடம் முன்னர் தான் தன் காதலை சொன்னவன் போன்று இல்லை. பல வருடங்கள் காதலித்து பழகியவனை போல உரிமையுடன் பேச மித்ரா வாயடைத்து மந்திரத்துக்கு கட்டுண்டவளை போல தலையை மட்டும் ஆட்டினாள்.. அவளுக்கு தெரியாது.. அவன்தான் அவன் உலகில் அவளுடன் தினமும் காதல் மொழிகளை பேசி அவளை கொஞ்சி சிராட்டி பாராட்டி வருகிறான் என்று.. அதனாலயே அவள் தன் காதலை ஏற்று கொண்டதும் எந்த தயக்கமும் இல்லாமல் ஷ்யாம் அவளிடம் பழக முடிந்தது... அவள் தலை அசைக்கவும் “தேங்க்யூ சோ மச் மிரா... ஐ லவ் யூ..” என மீண்டும் அவளை மெல்ல அணைத்து விடுவித்தான்.. மித்ரா வுக்கோ அவனை விட்டு விலகவே மனம் இல்லை... அவன் அணை

தவமின்றி கிடைத்த வரமே-39

Image
அத்தியாயம்-39 ம றுநாள் கண் விழித்தவள் தலை பாரமாக இருக்க, குளிக்க கூட பிடிக்காமல் தன் மாமியார் கொடுத்த காபியை வாங்கி கொண்டு தோட்டத்திற்கு சென்று விட்டாள்.. அவர் பார்வை வேறு அவளுக்கு கஷ்டமாக இருந்தது.. அவளை ஆராயும் பார்வையை அவளால தாங்க முடியவில்லை.. எல்லாத்தையும் தன் மாமியாரிடம் கதை அடிப்பவள் தங்களுக்குள் இருக்கும் இந்த பிணக்கை பற்றி சொல்ல வாய் வரவில்லை.. அதனால் அவர் பார்வையில் இருந்து தப்பித்து தோட்டத்திற்கு சென்று விட்டாள்.. காபியை பருகியபடி தன் அலைபேசியை எடுத்து பார்க்க, கை தானாக மித்ரா மெசேஜை திறந்தது.. அதில் இன்னும் சில புகைப்படங்களை அனுப்பி இருந்தாள்.. எல்லாவற்றிலுமே இருவரும் நெருக்கமாக இருப்பது போலவும் அதுவும் கடைசியாக இருந்த புகைப்படத்தில் வசி அவள் கட்டிலில் படுத்திருக்க அவன் மீது சாய்ந்த படி அமர்ந்து இருந்தாள் மித்ரா... அதை கண்டதும் உடல் எல்லாம் பற்றி எரிந்தது மலருக்கு.. அதே நேரம் மித்ரா மலருக்கு அழைக்க, அதை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்து எடுக்காமல் விட்டாள்.. மீண்டும் விடாமல் இரண்டாவது முறை அவள் அலைபேசி அழைக்க வேறு வழியில்லாமல் அதை எடுத்தாள் மலர்.. “ஹாய் மலர்... குட்ம

தவமின்றி கிடைத்த வரமே-37

Image
அத்தியாயம்-37 த ன் தம்பியின் பதிலை கேட்டவள் உள்ளம் குளிர்ந்து போக, “டேய்.. உன் பொறுப்புணர்வு நினைச்சு அப்படியே புல் அரிக்குது டா.. ரொம்ப சந்தோஷம் நீ இந்த அளவுக்கு யோசிக்கறியே.. அதுவும் எனக்காக இவ்வளவு யோசிச்சு பார்க்கறியே.. ரியலி ஐ ப்ரௌட் ஆ யூ.. அடுத்த ஜென்மத்திலும் நீயே எனக்கு தம்பியா வரணும்.. “ என்று சிரித்தவள் “இனி... ஆனாலும் நீ நினைக்கிற மாதிரி பெருசா ஒன்னும் எதிர்ப்பு இருக்காது.. நீ குதிரை ல வந்து தூக்கிட்டு போய் தாலி கட்டற அளவுக்கெல்லாம் போகாது.. நீ அந்த குழப்பதை விடு.. உண்மையிலயே உனக்கு வசு வை புடிச்சிருக்கா?. அவளை கல்யாணம் பண்ணி உன் பக்கத்துலயே வச்சுக்க தோணுதா? “ “ஹ்ம்ம்ம் யெஸ் யெஸ்..அதே தான் மலர்.. நான் இதுவரைக்கும் திருமணத்தை பத்தியெல்லாம் யோசிச்சதில்லை. அதற்கான வயதும் இது இல்ல. நான் இன்னும் மாஸ்டர் படிச்சு நல்ல ஒரு பொசிசனுக்கு வரணும்.. ஆனால் அப்படி ஒரு பொசிசினுக்கு வந்த பிறகு என் பெர்சனல் சைட் பார்த்தால் எனக்கு துணைவியா எண்ணி பார்த்தால் வசு தான் முன்னாடி வந்து நிக்கறா.. அப்படி பார்த்தால் அவளை தவிர்த்து வேற ஒருத்தியை என பக்கத்துல நிறுத்தி பார்க்க முடியலை.. சோ... இப்

தவமின்றி கிடைத்த வரமே-34

Image
அத்தியாயம்-34 த ன் அன்னையிடம் பேசி முடிக்கவும் அடுத்த நிமிடம் அவள் அலைபேசி ஒலிக்க, மீண்டும் அதை எடுத்து அதன் திரையில் பார்க்க மித்ரா என்று ஒளிர்ந்தது.. அந்த பெயரை கண்டதுமே அவள் உற்சாகம் எல்லாம் வடிந்து போனதை போல இருந்தது.. ஏனோ அவள் பெயரை கேட்டாலே அவளுக்கு வேப்பங்காய் போல கசந்தது.. அந்த அழைப்பை ஏற்கவா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருக்க அது முழுவதும் அடித்து நின்று போயிருந்தது... அப்பாடா என்று நிம்மதி அடைய அவள் நிம்மதியை குழைக்க என்று மீண்டும் ஒலித்தது.. அதற்கு மேல் தவிர்க்க முடியாமல் அந்த அழைப்பை ஏற்க “ஹாய் மலர்... எப்படி இருக்க?? “ என்றாள் மித்ரா உற்சாகமாக.. அவள் உற்சாகத்தை கண்ட மலருக்கு யோசனையாக இருந்தது.. “இவளுக்காகத்தானே நேற்று இரவு தன் கணவன் பதறி துடித்து ஓடினான்..இப்ப என்னடான்னா இவள் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறாளே ?? “ என்று அவசரமாக யோசித்தவள் “நான் நல்லா இருக்கேன்.. மித்ரா.. நீங்க எப்படி இருக்கீங்க?? “ என்றாள் வர வழைத்த உற்சாகத்துடன்.. “ஹ்ம்ம் ஐம் பைன்.. அப்புறம் பாவம் நைட் உன்னுடைய பர்ஸ்ட் நைட் நடக்காமல் ரொம்ப ஏமாந்து போயிருப்பியே...அதான் எப்படி இருக்க னு தெரிஞ்சுக்க போன

தவமின்றி கிடைத்த வரமே-32

Image
அத்தியாயம்-32 ஓ ர கண்ணால் மித்ரா நின்றிருந்த தோற்றத்தை கண்டதும் மலருக்கு கடுப்பாக இருந்தது.. அவனும் அதை தடுக்காமல் தள்ளி நிற்காமல் இளித்து கொண்டு நிற்பதை கண்டதும் இன்னும் பற்றி கொண்டு வந்தது மலருக்கு.. “ஒரு வேளை அவள் சொன்ன மாதிரி என் அப்பாவை காப்பாற்ற எண்ணி  கடமைக்காகத்தான் என்னை மணந்து கொண்டானா?? இவர்கள் இருவரும் தான் ஜோடி பொருத்தம் சரியாக இருக்குமோ? “ என்று மித்ராவை அளவிட்டு பார்க்க, அவளோ பல லட்சங்கள் விலை மிக்க ஒரு டிசைனர் ஸாரியில் அதற்கான ஒப்பனையுடன் பணக்கார மிடுக்குடன் கை ஹீல்ஸ் உடன் நிமிர்ந்து நின்று வசியின் கைபிடித்து கம்பீரமாக நின்றிருந்தாள்.. அவளுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்க, மித்ரா மடமடவென்று மேல ஏறி போனாள்.. மலர் இருந்த தராசு தடாலென்று கீழ விழுந்தது... அவளின் அந்த மிடுக்கான தோற்றமும் கண்ணில் தெரிந்த ஒரு அலட்சிய பார்வையும் ஒரு பிரமிப்பை கொடுக்க, வசிக்கு இந்த மாதிரி ஒரு மனைவி இருந்தால் தான் அவன் கலந்து கொள்ளும் பல முக்கிய விழாவுக்கு பொருத்தமாக இருக்கும்.. அதை விட்டு பட்டிகாடு மாதிரி இப்படி பட்டு புடவையை சுற்றி கொண்டு நகைகளை அள்ளி பூட்டி கொண்டு நிற்கும் நான் எப்படி பொருந்

தவமின்றி கிடைத்த வரமே-30

Image
அத்தியாயம்-30 வ சி சிறு புன்னகையுடன் அவள் தலை முடியை செல்லமாக கலைத்து விட்டு, அவன் இருக்கையின் இரவு விளக்கை ஆன் பண்ணி விட்டு ஒரு புத்தகத்தை பிரித்து வைத்து கொண்டு அதை படித்து வந்தான்... ஆனால் அவன் மனம் முழுவதும் கலங்கிய கண்களுடன் நின்று கொண்டிருந்த பனிமலரிடமே சென்று நின்றது... “தன் பிரிவை தாங்காமல் அவள் கண் கலங்குகிறாள் என்றால் அவள் என்னை கணவனாக ஏற்று கொண்டதாகத்தானே அர்த்தம்..அதுவும் வசு பங்சன் அப்ப எவ்வளவு ஜாலியா சிரிச்ச பேசினா.. “ என்று எண்ணியவனின் நினைவுகள் அன்றைய நாளை அசை போட, அவன் அவளை இழுத்து அணைத்தது கண் முன்னே வர, மெல்லிய புன்னகை அவன் உதட்டில்..அவன் உள்ளே இப்பொழுதும் அந்த பரவசம் உடல் எங்கும் பரவியது... மித்ரா அருகில் இருப்பதால் வெளியில் அவன் புன்னகைப்பது தெரியாமல் உள்ளுக்குள் சிரித்து கொண்டிருந்தான்.. ஆனால் பார்வை மட்டும் புத்தகத்தை படிப்பதை போல வைத்து கொண்டான்.. ஆனால் இதை அறியாத மித்ராவோ அவளுக்கு தெரிந்த வழிகளை எல்லாம் பயன்படுத்தி அவனை அவள் புறம் இழுக்க முயன்று கொண்டிருந்தாள்... அவன் மீசையை பிடித்து இழுத்தும் அவன் கை விரல்களுக்குள் தன் கையை விட்டு கொண்டும் அவன் காதருகில்

தவமின்றி கிடைத்த வரமே-28

Image
அத்தியாயம்-28 ஒ வ்வொருவராக அவளுக்கு நலுங்கு வைத்து கொண்டிருந்தனர்.... மலர் வாயிலில் நின்று வருபவர்களை வரவேற்று கொண்டிருந்தாள் புன்னகையுடன்... அப்பொழுது வசீகரன் நண்பர்களான ஆதி மற்றும் நிகிலன் அன்னையர்கள் ஜானகியும் சிவகாமியும் அங்கு வந்தனர்... வசி திருமணத்திற்கு முன்பே தன் நண்பர்களை பற்றி மலரிடம் சொல்லி இருக்கிறான்.... அவர்கள் குடும்பத்தை புகைப்படத்தில் பார்த்து இருந்ததால் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு “வாங்க ஜானகி அத்தை... வாங்க சிவா அத்தை.. எப்படி இருக்கீங்க?? எங்க மற்றவங்க எல்லாம் காணோம்...?? “ என்று சிரித்தவாறு அவர்கள் இருவரையும் வரவேற்றாள் மலர்... அவளின் சிரித்த முகமும் தங்களை முன்ன பின்ன பார்க்காமலயே அடையாளம் கண்டு கொண்ட அவளின் புத்திசாலிதனத்தையும் கண்டு வியந்தவாறு உள்ளே வந்தனர் சிரித்தவாறு.. “ஹ்ம்ம்ம் வாடி புது மருமகளே !!.... நாங்க சூப்பரா இருக்கோம்... நீ எப்படி இருக்க?? “ என்று சிரித்தவாறு உள்ளே வந்தார் சிவகாமி... ஜானகியும் அவளை நலம் விசாரித்து “சிவா.. மலரை பார்க்க அப்படியே பாதி பாரதி மாதிரியும் பாதி மது மாதிரியும் இருக்கா இல்லை.... “ என்றார் அதிசயித்தவாறு... “ஹ்ம்ம் நானும

தவமின்றி கிடைத்த வரமே-26

Image
அத்தியாயம்-26 ஓ ர கண்ணால் அவனை பார்க்க, அவனோ இயல்பாக ரொம்ப நாள் பழகியவனை போல அவள் வயிற்றை மெதுவாக அழுத்தி கொடுத்து கொண்டிருந்தான்.... பின் ஓரளவுக்கு வலி குறைந்திருக்க “யு பீல் பெட்டர் நௌ?? என்று வினவியவன் அவள் “ஹ்ம்ம்ம் “ என்று தலை அசைக்க, “ சரி.. நீ இப்படியே கண்ணை மூடிட்டு இரு.. நான் வந்திடறேன்.. “ என்று அவசரமாக வெளியில் கிளம்பி சென்றான்... அவன் சென்ற சில நிமிடங்களில் திரும்பி வந்தான் .. வந்தவன் கையில் ஒரு பார்சல் மாதிரி சுற்றி இருந்ததை கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தவன் “அக்கா இதை உனக்கு வாங்கி தர சொன்னா.... நீ பாத்ரூம் போய் இரு.. நான் போய் உனக்கு உன் ரூம்ல இருந்து வேற ட்ரெஸ் எடுத்துட்டு வர்ரேன் .. இப்போதைக்கு வேற ட்ரெஸ் மாத்திட்டு இந்த நாப்கின் ஐ யூஸ் பண்ணு... இன்னும் ஏதோ பார்மாலிட்டிஸ் இருக்காம்.. அம்மாவும் அக்காவும் கிளம்பி வர்றாங்க இப்போ.. “ என்றான் இயல்பாக.. அதை கேட்டு அவளுக்குத்தான் தர்மசங்கடமாக இருந்தது...அவன் முன்னாால் எழுந்து பாத்ரூம் க்கு செல்ல சங்கோஜமாக இருந்தது.. அவள் தரையை பார்த்து நெழிவதை கண்டவன் “ஹே... வசு.. டோன்ட் பி அன்கம்போர்ட்டபுள்.. இதெல்லாம் ஜஸ்ட் நம்ம பா

தவமின்றி கிடைத்த வரமே-24

Image
அத்தியாயம்-24 த ன் கண்ணை நம்பாமல்மீண்டும் கண்ணை கசக்கி விட்டு பார்க்க, அது அவர்கள் அந்த கிராமத்திற்கு முகாமிற்கு சென்ற பொழுது முகாமின் முடிவில் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து அவள் நண்பன் எடுத்த புகைபடம்.... அதுதான் இது.. அதில் அவள் வசீகரன் உடன் ஒட்டி நின்றிருந்தாள்... புகைபடம் எடுக்கும் பொழுது அவன் வேற ஏதோ ஒரு சிந்தனையில் இருந்ததால் அவள் அருகில் நின்றிருந்தது அப்பொழுது அவனுக்கு தெரியவில்லை... ஆனால் இந்த புகைபடத்தில் பார்க்க இருவரும் வெகு அருகில் ஒட்டி நின்றிருந்ததை பார்க்க உள்ளுக்குள் மழைச்சாரல் அடித்தது... அதையே ஆசையாக ரசித்து பார்த்தவன், “இது எப்படி?? “ என்றான்... அவளும் அவன் கண்டு கொண்டதை கண்டு தன் உதட்டை மடித்து கொண்டு “என் பிரண்ட் கிட்ட இருந்து வாங்கி பிரின்ட் பண்ணி வச்சேன் டாக்டர்.... “ என்று அசடு வழிந்தாள் சிரித்தவாறு... அவசரமாக முன் பக்கம் திருப்ப, இந்த மாதிரி அவள் கலந்து கொண்ட மற்ற முகாம் போட்டோ எதுவும் அதில் இல்லை... தன்னுடன் இருக்கும் இந்த போட்டோவை மட்டும் தனியாக எடுத்து வைத்திருக்கிறாள் என்றால் ?? “அப்ப என்னை பிடித்து போய்தானே வைத்திருக்கிறாள்..”. என்று கொஞ்சம்

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!