காதோடுதான் நான் பாடுவேன்-40
அத்தியாயம்-40 த ன் மகளை கண்டதும் இந்த உலகத்தையே வென்று விட்ட பெருமிதத்தில் நிகிலன் தன் மனைவியை பார்க்க, அவளோ தன் கணவன் தன்னை புரிந்து கொண்டான்... அவன் சொன்ன மாதிரி அவன் குழந்தையை பத்திரமாக கொடுத்தாச்சு என்று நிம்மதியுடன் கண்ணை மூடியிருந்தாள்..... அதை கண்டதும் ஒரு நொடி அவன் இதயம் நின்று விட்டது.... “டாக்டர்.......................” என்று அலறினான் அவன் உடல் நடுங்க..... “எதுக்குப்பா இப்படி அலற?? உன் பொண்டாட்டி போட்ட சத்தத்தை விட நீ அலறதுதான் பெருசா இருக்கு.. “ என்று சிரித்தார் அந்த டாக்டர்... “டாக்டர்..... ம மது மதுவுக்கு என்னாச்சு?? “ என்றான் வார்த்தை வராமல் தொண்டை அடைத்து கொள்ள.... “ஹ்ம்ம்ம் ஒன்னும் இல்ல.. இலேசான மயக்கம் தான்... கஷ்ட பட்டு புள்ளைய பெத்திருக்கா இல்ல.. அதுக்கான சோர்வு தான்.... கொஞ்ச நேரத்துல சரியாய்டுவா...” என்றார் சாதாரணமாக... அதை கேட்டதும் நிம்மதி மூச்சு விட்டான் அந்த வடிவேலன்....இந்த உலகையே ஆட்டி வைக்கும் அந்த ஈசனின் மகன் ஒரு நொடியே என்றாலும் அவனே அரண்டு போனதை கண்ட அந்த விதியோ “அது..... அந்த பயம் இருக்கட்டும் வேலா..... “ என்று நமட்டு சிரிப்பை சிரித்...