காதோடுதான் நான் பாடுவேன்-28
அத்தியாயம்-28 “ ந மது இல்லம்” என்று பெயரிட்டிருந்த அந்த இல்லத்தின் முன் தன் காரை நிறுத்தி நிகிலன் கீழ இறங்க, மதுவும் தயங்கியவாறு காரிலிருந்து கீழ இறங்கினாள்... ஒரு வேகத்தில் அவள் ரமணியை பார்க்கணும் என்று சொல்லிவிட்டாலும் அவர் எப்படி தன்னை வரவேற்க போகிறாரோ என்று பயந்து கொண்டே தன் கணவன் பின்னால் நடந்தாள்... அவனும் திரும்பி அவள் பக்கம் பார்த்து ”ஏய்.. அம்மா கொஞ்சம் டிஸ்டர்ப் ஆ இருப்பாங்க.. நீ அவங்க மனசு கஷ்டபடுற மாதிரி எதுவும் நடந்துக்க கூடாது... என்ன புரிஞ்சுதா?? “என்று எச்சரிக்க, அவளும் சரியென்று தலை அசைத்தாள்... பின் நிகிலன் முன்னால் நடக்க, அவன் பின்னே வந்தவள் நிமிர்ந்து அந்த இடத்தை பார்வையிட்டாள்.. அது ஒரு சென்னையில் இருந்து ஒதுக்கு புறமாக அமைந்திருந்த இடம்.. சென்னையின் போக்குவரத்து நெரிசல், வாகனங்களின் அலறல் சத்தம்,காய்கறி விற்பவர்களின் கூச்சல் என எதுவும் இல்லாமல் முக்கியமாக எந்தவித pollution ம் இல்லாமல் முதியவர்களுக்கு பொருத்தமாக வசதியாக சுத்தமான காற்றுடன் அமைதியாக இருந்தது அந்த இடம்...... நான்கு வருடம் முன்பு தன் இல்லத்தை நகரிலிருந்து இந்த மாதிரி அமைதியாக இருக்கும் ...