தவமின்றி கிடைத்த வரமே-36
அத்தியாயம்-36 அ டுத்து வந்த இரண்டு மாதங்களும் சொர்க்கமாக இருந்தது அந்த புதுமண தம்பதியர்களுக்கு.. முடிந்த வரை வசி இரவில் சீக்கிரம் வீடு திரும்பி விடுவான்..இரவு உணவை முடித்து தங்கள் அறைக்கு வந்தால் அதன் பிறகு அடுத்த நாள் அவன் கிளம்பி மருத்துவமனைக்கு செல்லும் வரைக்குமே மலருடனே சுற்றி கொண்டிருந்தான்.. மலருக்கும் தன் கணவனின் அன்பை, தன் மேல் பைத்தியமாக இருக்கும் அவன் ஆசையை எண்ணி பூரித்து கொண்டாள்..தன் திருமண வாழ்க்கைக்கு எதிரியாக எண்ணி இருந்த மித்ராவுமே இப்பொழுது அவளிடம் நட்புடன் தினமும் அழைத்து பேச, மலரும் மகிழ்ச்சியாகி போனாள்.. மொத்தத்தில் ஒரு சந்தோஷ உலகில் மிதந்து கொண்டிருந்தாள் பனிமலர்.. இப்பொழுது அவளுடைய MBA ப்ராஜெக்ட் ஐ RJS மருத்துவமனையிலயே பண்ண, அடிக்கடி அதன் விசயமாக RJS க்கும் சென்று வருகிறாள்..அங்கு பாரதியை பார்க்கும் சமயங்களில் அவளுடன் கதை அடித்து பேசி கொண்டிருந்தாலே பயங்கர உற்சாகம் ஆகிவிடுவாள் மலர்.. பாரதியும் மலரையே அந்த ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் பொறுப்பை எடுத்து கொள்ள சொல்ல அவளோ இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. இன்னும் நிறைய கற்று கொண்டு பொறுப்பை எடுத்து கொள்வதாக சொல்லி...