காதோடுதான் நான் பாடுவேன்-9
அத்தியாயம்-9 கௌ தம் ன் அழைப்பை ஏற்ற நிகிலன் தன் அலைபேசியை எடுத்துகொண்டு பால்கனிக்கு சென்றதும் இதுவரை கட்டுபடுத்தி வைத்திருந்த சிரிப்பு வெடிக்க வாய்விட்டு சிரித்தான்..... அவன் சிரிப்பை கேட்டதும் மறுமுனையில் ஒன்றும் புரியாமல் முழித்தான் கௌதம்.... “டேய்.. மச்சான் எதுக்குடா இப்படி சிரிக்கிற?? “ என்றான் ஆர்வமாக மறுமுனையில்... நிகிலன் மீண்டும் சிரிக்க, கொஞ்சம் பொருத்து பின் கடுப்பான கௌதம் “டேய்... சொல்லிட்டு சிரிடா... நானும் கூட சேர்ந்து சிரிப்பேன் இல்ல... நீ பாட்டுக்கு தனியா சிரிச்சா என்ன அர்த்தம்.?? “ என்று திட்டினான்... ஒரு வழியாக அவன் சிரித்து முடித்ததும் “சரியான காமெடி டா ... “ என்றான் இன்னும் சிரித்தவாறு.... அவனின் அந்த வாய் விட்டு சிரித்த சிரிப்பை ரசித்த கௌதம், “அப்படி என்ன காமெடிடா பார்த்த?? எந்த சேனல் னு சொல்லு.. நானும் பார்க்கறேன்... “ என்றான் கௌதம் ஆர்வமாக... “ஹ்ம்ம்ம் இது எந்த சேனலிலும் வராத காமெடி...”என்று மீண்டும் சிரித்தான் நிகிலன்... “டேய் மச்சான்.. நிஜமாகவே உன் வீடு தேடி வந்து அடிப்பேன்.. கடுப்பேத்தாம என்ன நடந்தது?? எதுக்கு சிரிக்கிற னு சொல்லு.. “ என்றான் எரிச்சலுடன்.....