காதோடுதான் நான் பாடுவேன்-13
அத்தியாயம்-13 அ ன்று திங்கள்கிழமை...நாட்களில் அனைவருக்குமே பிடிக்காத நாள் திங்கள்கிழமை.. வேலைக்கு செல்பவர்கள் மட்டும் அல்லாமல், பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கும், அவர்களை காலையிலயே போராடி எழுப்பி பள்ளிக்கு அனுப்பி வைக்கும் தாய்மார்கள் என்று அனைவருக்குமே இந்த திங்கள்கிழமை மட்டும் ஏன் தான் வருகிறதோ என்று இருக்கும்... அதுவும் வார விடுமுறை கொண்டாட்டத்தில் முதல் நாள் இரவு நீண்டநேரம் ஆடியவர்களுக்கு அவர்கள் படுக்கைக்கு சென்ற சில மணி நேரத்திலயே அவர்கள் வைத்த அலாரம் நாராசமாக ஒலிக்க அவ்வளவு கடுப்பாக வரும் நாள் இந்த திங்கள்கிழமை.... அந்த மாதிரி அனைவரும் வெறுக்கும் அந்த நாளில் ,வழக்கம் போல 6 மணிக்கு அலாரம் ஒலிக்க, அதை படுக்கையில் இருந்து கொண்டே கை நீட்டி அனைத்தான் ஜெயந்த்... இன்னும் கொஞ்ச நேரம் படுக்கையிலயே கிடக்க சொல்லி கெஞ்சிய தன் மனதையும் உடலையும் அடக்கியவன் எழுந்து குளியல்அறைக்குள் சென்றான்.... முகம் கழுவி பிரஸ்ஸில் பேஸ்ட்டை போட்டவன் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து கொண்டே பல் துலக்கி கொண்டிருந்தவன் அன்று என்ன நாள் என்று மனதில் எண்ணி பார்த்தான்... வாரம் ஏழு நாட்களுமே அவனுக்...