Posts

Showing posts with the label பூங்கதவே தாழ் திறவாய்

பூங்கதவே தாழ் திறவாய்-36(Final)

Image
  இதழ்-36   ஒ ரு வாரத்திற்கு பிறகு நந்தன் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்திருந்தான்... இந்த ஒரு வாரமும் தீக்சா அவனை விட்டு அகலாமல் அவன் பக்கத்தில் இருந்து அவனை கவனித்து கொண்டாள்... பரிமளம் தான் தன் பேத்தியை முழு நேரமும் கவனித்து கொண்டார்.. அவள் பால் குடிக்கும் நேரம் மட்டும் அதுவும் அவரே தீக்சாவிற்கு நினைவு படுத்தி அவளை பால் ஊட்ட வைத்து பின் தூக்கி கொண்டு சென்று விடுவார்... என்னதான் அவன் அருகில் இருந்தே அவனை கவனித்து கொண்டாளும் , அவன் வாய் திறந்து அவளிடம் எதுவும் பேசவில்லை.. இவளோ   ஒரு ஆயிரம் முறையாவது   சாரி சொல்லி இருப்பாள்.. ஆனால் அவனோ   அதை எதுவும் கண்டு கொள்ளவில்லை.. அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை... அதே வெறித்த பார்வைதான்... அதை கண்டு இன்னும் கலங்கி போனாள்.. ஆனாலும் தன்னை தேற்றி கொண்டு அவனை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவனுடனே தங்கி விட்டாள்... ஒ ரு வாரத்திற்கு பிறகு தலையில் கட்டெல்லாம் பிரித்து அவன் எப்பவும் போல எல்லா வேலையும் செய்யலாம்.. ஆனாலும் ரொம்ப   ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம்.. “ என்று சொல்லி அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.... ...

பூங்கதவே தாழ் திறவாய்-35(pre-final)

Image
  இதழ்-35 தீ க்சா மீண்டும் கண் விழித்த பொழுது,  தன் அன்னை  கலங்கிய முகத்துடன் எதிரில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது... என்னாச்சு எனக்கு ??  என்று  மூளையை கசக்கி அவசரமாக யோசிக்க , நேற்று இரவு நந்தன் வேகமாக வெளியில் சென்றதும் அதை தொடர்ந்து காலையில் கேட்ட செய்தியும் நினைவு வர , அவள் முகம் கலவரமானது.... தன் அருகில் இருந்த அன்னையிடம் “மா.... ந... நந்..... நந்தனுக்கு என்னாச்சு மா ?? இப்ப எப்படி இருக்கார்... எங்க இருக்கார் ?? “ என்றாள் அவசரமாக...... அதைக் கேட்டு அவளை ஒரு எரித்து  விடும் பார்வை பார்த்தார் பரிமளம் எதையும் சொல்லாமல்.... “ப்ளீஸ் மா... அவருக்கு என்னாச்சு னு சொல்லு.... “ என்றாள் மீண்டும் கண்ணில் வழியும் நீருடன்.... அவளின் நிலையை கண்டு அவருக்குமே கஷ்டமாகத்தான்  இருந்தது.. ஆனாலும் மனதை  கல்லாக்கி கொண்டு “நீ எதுக்கு அவரை பத்தி கேட்கற ?? அதான் தினம் தினம் நீ உயிரோடு அவரை சாகடிச்சுகிட்டிக்கியே.. அவருக்கு என்ன ஆனால் உனக்கென்ன ?? “ என்றார் வெறித்த பார்வையுடன்.... “ஐயோ... தப்புதான்... நான் பண்ணினது தப்புதான் மா.... எனக்கு இப்ப புரிஞ்சிடுச்சு.....

பூங்கதவே தாழ் திறவாய்-34

Image
  இதழ்-34   அ டுத்த நாள் காலை உணவை முடித்து அபி அலுவலகம்   செல்ல கிளம்பியவனிடம் “மாப்பிள்ளை... இன்னைக்கு நான் என் வீட்டுக்கு போகிறேன்... தீக்சா மட்டும் தனியா இருப்பா... மாலை கொஞ்சம்   சீக்கிரம் வந்திடுங்க.. “ என்றார்.. அதை கேட்டு இருவரும் அதிர்ந்து அவரை   பார்க்க தீக்சாதான் முந்தி   கொண்டு “அம்மா.. எதுக்கு இப்ப திடீர்னு கிளம்பற ?? “ என்றாள் சந்தேகமாக “திடீர் னு இல்ல மா.. எனக்கு உன் அப்பா ஞாபகம் வந்திருச்சு...   அவருடன்   வாழ்ந்த அந்த   வீட்டை போய் பார்க்கணும் போல இருக்கு.. மூனு மாசம் அப்படியே போட்டுட்டு வந்தாச்சி... இப்பதான் நீ பாப்பா வை நல்லா பார்த்துக்குற இல்லை.. நான் போய் ஒரு மாசம் அந்த வீடல இருந்துட்டு வர்ரேன்.. “என்றார்.. “மா.. என்னால இவள தனியா பார்த்துக்க முடியாது.. “   என்று சிணுங்கினாள் தீக்சா.. “தனியா ஏன் பார்த்துக்கற ?? .. அதான் மாப்பிள்ளை இருக்கிறார் இல்லை... இனிமேல் நீ மேல அவர் ரூம்க்கே போய்டு... ஆதிரா குட்டியை   நைட் அவர் பார்த்துக்குவார்.. நீ பகல்ல மட்டும் பார்த்துக்கோ.. “ என்றார்... அப்பொழுது...

பூங்கதவே தாழ் திறவாய்-33

Image
  இதழ்-33   நா ட்கள் வேகமாக நகர , தீக்சா தன் புகுந்த  வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன... தீக்சா திருமணம் முடித்து அபிநந்தன் வீட்டிற்கு வந்த அடுத்த வாரத்துலயே அபிநந்தன் தன் மகளுக்கு பெயர் சூட்டும் விழாவை பெரிதாக ஏற்பாடு பண்ணி அந்த விழாவின் மூலமாக தன் மனைவி மகளை அனைவருக்கும் அறிமுக படுத்தினான்... தீக்சாவும் உள்ளுக்குள் மருகினாலும் வெளியில் சிரித்த படி அனைவரையும் வரவேற்று உபசரித்து அபிநந்தனின் மனைவியாக பொறுப்புடன் நடந்து கொண்டாள்... எப்பொழுதும் தன்னை முறைத்து கொண்டே இருப்பவள் இன்று உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் அந்த விழாவில் வலம் வருவதை கண்டு மகிழ்ந்து போனான்... அவன் பார்வை அடிக்கடி அவளையே சுற்றி வந்தது...பின் அனைவரும் ஒன்று கூடி தொட்டிலில் கிடந்த அந்த குட்டி தேவதைக்கு ஆதிரா என்று பெயர் சூட்டினர்... தன் மகளை கையில் ஏந்தி கொண்டு தன் மனைவியை அணைத்தவாறு விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி சொல்லி புன்னகையுடன் அனுப்பி வைத்தான்... தீக்சாவின் அருகில் அதுவும் கொள்ளை அழகுடன் திகழும் தன் தேவதையுடன் இப்படி அருகில் நிற்பான் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை அபிநந்தன்....

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!