காதோடுதான் நான் பாடுவேன்-39
அத்தியாயம்-39 இ தோடு ஒரு மாதம் ஆகிவிட்டது மது தன் பிறந்த வீட்டிற்கு சென்று .. தன் பெற்றோர்களின் பாச மழையில் திக்கு முக்காடி போனாள் மது.. சாரதா வேலைக்கு சென்றாலும் மாலை 4 மணிக்கெல்லாம் ஓடி வந்து விடுவார்... அவள் தந்தையோ அவளை விட்டு நகராமல் அவளுடனே சுற்றி கொண்டிருந்தார்... இரவு தன் தாயின் மடியில் படுத்துகொண்டு கதை பேசி கொண்டே அவர் உருட்டி கொடுக்கும் சாதத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டே கதை பேசுவாள்... சண்முகம் தன் பேரக் குழந்தைக்கு நிறைய கதை சொல்வார்.. அதை கேட்கும் பொழுது பாரதி சொன்னது நினைவு வரும்... “ஆதி அண்ணா பாரதியை எப்படி பார்த்து கொண்டார்...தினமும் ஒரு கதை சொல்லி அவர் மகளை வயிற்றில் இருக்கும் பொழுதே கொஞ்சுவார் என்று... ஆனால் தன் கணவனோ அவளை எதுவும் கண்டு கொள்வதில்லை.... தன்னை கண்டு கொள்ளாவிட்டாலும் கூட பரவாயில்லை... அட்லீஸ்ட் அவன் குழந்தையிடமாவது அன்பாக நடந்து கொண்டிருக்கலாம்.... “என்று உள்ளம் வாடினாள்...... ஆனால் அதே நேரம் பாரதி அப்பொழுது அவள் பெற்றோர்களை பிரிந்து அவர்கள் அன்புக்கு ஏங்கி இருந்தது நினைவு வந்தது... “ஹ்ம்ம்ம் .. இந்த மாதிரி இருக்கும் நேரத்தில் பாரதிக்கு...