காதோடுதான் நான் பாடுவேன்-15
அத்தியாயம்-15 நி கிலன் ஒரு கட்டிடத்தின் உள்ளே நுழைய, அவன் பின்னே வந்தவள், உள்ளே கண்டதும் உள்ளம் துள்ளி குதிக்க, கண்களை அகல விரித்தாள் மதுவந்தினி.... அது ஒரு பேட்மின்டன் பயிற்சி மையம்... உள்ளே நுழைந்ததும் சிறிய வரவேற்பறையும் வந்தவர்கள் அமர்ந்திருக்க ஒரு சில சோபாக்கள் மட்டுமே போடப்பட்டு இருந்தது.. மீதி இடமெல்லாம் பேட்மின்டன் கோர்ட்டுகளாக மாற்ற பட்டிருந்தன.. ஆண்களும் பெண்களுமாக சிறுவயது முதல் பெரியவர்கள் வரை பல பிரிவினர் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர்.... அவர்களை பார்க்கும் பொழுது மதுவுக்கும் உள்ளுக்குள் ஆசையாக இருந்தது... அவளுக்குமே இந்த மாதிரி விளையாட வேண்டும் போல இருந்தது.... ஆனால் எப்பவும் போல அவளின் பயம் வந்து ஒட்டிக் கொள்ள அங்கு இருப்பர்கள் எல்லாம் அவளையே பார்ப்பதை போல இருக்க, அருகில் நின்று கொண்டிருந்த தன் கணவன் அருகில் இன்னும் கொஞ்சம் நெருங்கி நின்று கொண்டாள்... அப்பொழுது தான் நினைவு வந்தது.. “எதற்காக என்னை இங்க வரச் சொன்னான்?? ஒரு வேளை அகிலா இங்க இருக்காளோ?? அவளை கூட்டி போகத்தான் வந்திருக்கானா?? அப்ப என்னை எதுக்கு வரச் சொன்னான்?? “ என்று யோசித்து கொண்டிருந்தாள்.. ஆனால...