என் மடியில் பூத்த மலரே-6
அத்தியாயம்-6 ம ருத்துவமனையில் இருந்து திரும்பி வரும் வழியில், சுசிலா சொன்ன செய்திகளே திரும்ப திரும்ப நினைவு வந்தது.. அதிலும் அந்த வாடகை தாய் பற்றிய விளக்கமும், அந்த நடிகரோட செயலும் மீண்டும் மீண்டும் ஒலித்தது ஜானகிக்கு... அவர் மனதுக்குள்ளே சில கணக்குகளை போட்டு பார்த்தார்.. அதற்கான விடை சரியாக வரவும் திருப்தியாகியது.. ஆனால் அவர் போட்ட கணக்கால் ஒரு பொண்ணோட வாழ்க்கை பாதிக்கபடும் என்பதை அறிந்திருக்கவில்லை ஜானகி அப்பொழுது.. மடமடவென ஒரு திட்டத்தை தீட்டினார்... ஆனால் இது சரியா வருமா?? என்ற குழப்பமும் தப்பாயிருச்சுனா என்ற பயமும் மாறி மாறி வந்தது.. அதே மன நிலையுடன் வீட்டை அடைந்தவர் நேராக பூஜை அறைக்கு சென்றார்.. தன் திட்டம் சரியா, தப்பா, நிறை வேறுமா , ஆகாதா என்று அந்த முருகனிடமே முடிவை வைத்தார்.... இந்த ஆட்டத்தையே ஆரம்பித்து வைத்தவன் அவன் அல்லவா... தனக்கு என்ன வேண்டுமோ, எப்படி அடுத்த காய் நகர்த்தனுமோ அதையே ஜானகிக்கு முடிவாக கொடுத்தான் சிரித்துகொண்டே!! .. அந்த வேலன் அழித்த உத்தரவை கண்டதும் ஜானகிக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது.... அவர் முகம் புன்னகையில் மலர்ந்தது... ஒரு ச...