தவமின்றி கிடைத்த வரமே-38
அத்தியாயம்-38 வ சுந்தராவின் மனதில் இருந்த குழப்பத்தை நீக்கி, அவளுக்கு காதலை பற்றிய ஒரு தெளிவை கொடுத்த நிம்மதியில் தன் அறைக்கு வந்தாள் பனிமலர்... “வசு சொன்ன மாதிரி சரியான நேரத்தில் அவள் பிரச்சனையை கண்டுபிடிச்சு அதுக்கு தீர்வும் கொடுத்தாச்சு.. இனிமேல் வசு நல்லா படிப்பா... “ என்ற நிம்மதியுடன் தன் அறைக்கு வந்தாள்.. உள்ளே வந்தவள் அங்கு கட்டிலில் உறங்கி கொண்டிருந்த தன் கணவனை கண்டதும் திகைத்து நின்றாள். “இவன் எப்பொழுது வந்தான்? அதுவும் வந்த உடனே தன்னைக் கூட அழைக்காமல் சாப்பிட்டு அதுக்குள்ள உறங்கி விட்டானா? அவ்வளவு நேரமா ஆகிடுச்சு? என்று மணியை பார்த்தவள் அப்படி ஒன்றும் நேரம் ஆகி இருக்கவில்லை.. எத்தனையோ நாள் இதைவிட தாமதம் ஆகி வந்த பொழுதும் தன் மனைவியை கொஞ்சிவிட்டு இரவு பன்னிரண்டு மணிக்கும் மேல தான் உறங்குவான் வசீகரன்.. “இன்று தனக்காக கூட காத்திருக்காமல் வந்த உடனே உறங்கி விட்டானே ? ஒரு வேளை வேலை அதிகமா இருக்குமோ? “ என்று யோசித்தவாறு அந்த அறையின் விளக்கை அணைத்து விட்டு அவளும் வந்து அவன் அருகில் படுத்து கொண்டாள்.. தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்த இந்த இரண்டு மாதங்களில் ஒரு நாளும் வசி அவள...