என் மடியில் பூத்த மலரே-15
அத்தியாயம்-15 எ து நடந்தாலும், என்ன ஆனாலும் ஜானகி அத்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றனும் என்று எண்ணி கொண்டாள் பாரதி.. அந்த நேரம் அவளின் அலைபேசி ஒலித்தது.. அவள் யாரை நினைத்து கொண்டிருந்தாளோ அவரே அவளை அழைத்து இருந்தார்... அதை கண்டதும் பாரதியின் முகத்தில் புன்னகை அறும்பியது...அதே புன்னகையுடன் அதை அட்டென்ட் பண்ணியவள் "நூறு ஆயுசு அத்தை உங்களுக்கு.. இப்பதான் உங்களை பற்றி நினைத்தேன்.. நீங்களே போன் பண்ணீட்டிங்க" என்று சிரித்தாள் பாரதி... "ஹ்ம்ம்ம் எனக்கு நூறு ஆயுசு வாழனும்னு பேராசை எல்லாம் இல்லை பாரதி மா ... என் பேரனையோ பேத்தியையோ பார்த்துட்டு அவங்களோட கொஞ்ச நாள் ஓடியாடி விளையாடிட்டா போதும்ம்.. நான் நிம்மதியா என் ராம் இருக்கற இடத்துக்கே போய்டுவேன் " என்று பெருமூச்சு விட்டார்.. “ஹ்ம்ம் அவ்வளவு சீக்கிரம் உங்கள நிம்மதயா போக விட்டுடுவேனா??? இன்னும் எவ்வளவோ இருக்கு நீங்க பார்க்க, அனுபவிக்க... அதுக்குள்ள போறேனா எப்படியாம்??? "என்று சிரித்தாள்.. “ஹ்ம்ம்ம் உன் பேச்சை கேட்டாதான் எனக்கு தெம்பே வருது.. இன்னும் கொஞ்ச நாள் உங்களோட எல்லாம் வாழனும்னு ஆசையே வருது பாரதிமா...