உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-2
அத்தியாயம்-2 ம ணமேடையில் அமர்ந்து இருந்த பவித்ரா தன் அருகில் மணமகனாக அமர்ந்து இருந்தவனை கண்டதும் அதிர்ந்து போய் “இவனா என் அருகில் அமர்ந்து இருப்பது.? இவன் எப்படி இங்கே” என்ற கேள்வியுடன் ஆதியை பார்க்க அவனோ இவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவனாக “நானே தான் பேபி“ என்று குறும்பாக கண்ணடித்தான் தாலியை கையில் பிடித்தபடி... பவித்ராவுக்கு இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று உரைக்கவும் அவசரமாக மணமேடையில் இருந்து எழுந்திருக்க முயன்றாள்.. ஏற்கனவே ஆதி மிகவும் நெருக்கத்தில் அமர்ந்து இருந்ததால் அவளால் உடனே எழுந்திருக்க முடியவில்லை. அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவன் அவள் எழுந்திருக்க விடாமல் அதற்குள் அவசரமாக அந்த பொன் தாலியை பவித்ராவின் கழுத்தில் அணிவித்திருந்தான்.. ஆதி இரண்டு முடிச்சுகளிட அவன் பெரியம்மாவின் மகள் ஜனனி நாத்தனார் முறைக்காக மூன்றாவது முடிச்சை போட்டு பவித்ராவை தன் மனைவியாக்கி இருந்தான் ஆதித்யா ... நடந்த நிகழ்வுகள் புரிய சில விநாடிகள் ஆனது பவித்ராவிற்கு.. அவள் இப்பொழுது ஆதித்யாவின் மனைவி... எல்லாம் தன் கையை மீறிவிட்டது..இனிமேல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து அதிர...