என் மடியில் பூத்த மலரே-5
அத்தியாயம்-5 ந ர்ஸ் வெளியே செல்லவும் அந்த பெண் அவசரமாக பதட்டத்துடன் உள்ளே வந்தாள்.. அந்த பெண்ணை பார்த்ததும் ஜானகியின் முகம் மாறியது. இந்த பெண்ணை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்தார்.. அதற்குள் சுசிலா அந்த பெண்ணை பார்த்து , “வாம்மா.. ஜெயந்தி.. போன வாரம் தானே செக்கப்புக்கு வந்துட்டு போன.. எல்லாம் நார்மலா இருந்ததே.. இப்ப என்ன மீண்டும்? எனி ப்ராப்லம்? “ஆமா டாக்டர்.. லைட் டா ப்லீடிங் ஆகிற மாதிரி இருக்கு. ரொம்ப பயமா இருக்கு. அதான் நேர்லயே உங்களை பார்க்க வந்திட்டேன்..” “பயப்படாத.. ஒன்னும் ஆகாது.. வா செக் பண்றேன்” என்று உள்ளே அழைத்து சென்றார் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவர் ”ஒன்னும் பயப்படற மாதிரி இல்லமா.. எல்லாம் நார்மலா தான் இருக்கு.. இது சும்மா சில பேருக்கு இப்படி ஆகும் “ என்றதும் தான் அந்த பெண்ணின் முகத்தில் தெளிவு வந்தது.. “ரொம்ப நன்றி டாக்டர். பல வருடங்களுக்கு பிறகு எனக்கு கிடைத்திருக்கிற பாக்கியம் இது. அதான் ஏதாவது சின்ன மாற்றம் னா கூட உடனே பயந்திடறேன் “ என்று புன்னகைத்தவள் அருகில் அமர்ந்திருந்த ஜானகியை அப்பொழுது தான் கவனித்தாள்.. ஜானகியும் அந்த ...