உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-61(Final)
அத்தியாயம்- 61(இறுதி அத்தியாயம்) நான்கு வருடங்களுக்கு பிறகு இ ரவு சமையல் அறையில் நின்று கொண்டு பாலை காய்ச்சி கொண்டிருந்தாள் பவித்ரா.... நான்கு வருடங்கள் ஓடியிருந்தது அதற்குள்.. இந்த நான்கு வருடங்களில் இருவரின் காதலும் அன்பும் பல மடங்கு கூடியிருந்தது...தன் கணவனின் அன்பை நினைத்து நெகிழ்ந்து போனாள் பவித்ரா...அவளுக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறான்... நான்கு வருடம் முன்பு அந்த ஸ்வீட்டியை சந்தித்த பிறகு பவித்ரா அவளை மறந்து விட்டாள்.. ஆனால் அடுத்த நாளே பவித்ராவிற்கு போன் பண்ணி ஆதியை தன்னை மன்னித்து விட்டு விடும் படி கெஞ்ச , பவித்ராவும் ஆதியிடன் கெஞ்சி கேட்க அவளுக்காக அந்த ஸ்வீட்டியை மன்னித்து விட்டான்.. அதே போல அவளுக்கு கெடுதல் செய்த அந்த ரிஷியை அடுத்த வாரமே அவன் தொழிலை எல்லாம் முடக்கி விட , அதில் கதிகலங்கி போனான் ரிஷி... அவனுடைய அப்பா வந்து ஆதியிடம் கெஞ்சி தன் மகனை விட்டு விட சொல்ல , ஆதி மறுத்து விட்டான்.. பின் அவரும் ரிஷியும் பவித்ராவை வந்து சந்தித்து அவளிடம் மன்னிப்பு கேட்டி அவளை ஆதியிடம் சொல்ல சொல்லி கெஞ்ச , அவர்களை பார்த்து பாவமாக இருக்க , வே...