என் மடியில் பூத்த மலரே-13
அத்தியாயம்-13 ரா ம்குமாரின் கை கால்கள இழுக்க ஆரம்பித்ததை கண்ட ஜானகி “ஆதி “ என்று அலறினார்... அவனிடம் இருந்து எந்த பதிலும் வராததால் மெல்ல மாடி ஏறி அவன் அறையை அடைந்தார்... அங்கு ஆதித்யாவோ அலங்கோலமாக கிடந்தான்... அவன் உதடுகளோ .“நான் தோத்துட்டேன்... என்னால் ஒன்னும் செய்ய முடியல ... அவ என்னை ஏமாத்திட்டா “ என்று புலம்பியது.. அதை பார்த்ததும் நெஞ்சை பிசைந்தது ஜானகிக்கு... “எப்படி ராஜகுமாரானக இருந்தவன் இப்படி ஆயிட்டானே .. நான் என்ன செய்வேன்” என்று மனதிற்குள் புலம்பியவர் “ஆதி.. கண்ணா.. அப்பாவுக்கு முடியல.. எழுந்திருடா” என்று அவனை உலுக்கி எழுப்பினார்.. ஆனால் அவனோ அதை உணரும் நிலையில் இல்லை... “இப்ப என்ன செய்யறது??? .. எனக்கு எந்த டாக்டரையும் தெரியாதே.. எல்லாம் ஆதி இருக்கிற தைரியத்தில் டாக்டர் பற்றி எந்த விவரத்தையும் வாங்கி வைக்கலையே.. இப்ப எப்படி கூப்பிடறது...” என்று புலம்பியவர் அருகில் கிடந்த அவனின் மொபைலை எடுத்தார். அதில் டாக்டர் நம்பரை வச்சிருப்பான் என்று.. மொபைலை ஆன் பண்ணவும் அதில் ஆதித்யாவும் ஸ்வேதாவும் சிரித்து கொண்டிருந்தனர் மிகவும் நெருக்கமாக....அதை கண்டதும் ஜானகியின் மன...