காதோடுதான் நான் பாடுவேன்-12
அத்தியாயம்-12 அ ந்த உணவகத்தில் உள்ளே நுழைந்ததும் ஆதியும் பாரதியும் அருகில் அமர்ந்து கொள்ள அவன் அருகில் குழந்தைகள் அமரும் பெரிய நாற்காலியை போட்டு தன் இளவரசியை அருகில் அமர வைத்து கொண்டான் ஆதி.. ஜானகி தன் பேத்தியின் அருகில் அமர்ந்து கொள்ள சிவகாமி ஜானகிக்கு எதிர்புறமாக அமர்ந்து கொண்டாள்... அவரை ஒட்டி அகிலா அமர, அடுத்து மது அவள் அருகில் அமர்ந்து கொண்டாள் பாரதிக்கு எதிர்புறமாக.... தன் காரை பார்க்கிங்கில் விட்டு வரும் வழியில் தெரிந்தவருடன் உரையாடி கொண்டிருந்து விட்டு வந்த நிகிலன் அங்கு மது அருகில் ஒரு இடம் மட்டும் காலியாக இருக்க அதில் சென்று அமர்ந்தான்... அகிலாவிடம் எதையோ சொல்லி சிரித்து பேசி கொண்டிருந்த மது தன் அருகில் யாரோ அமருவது தெரிந்து தலையை நிமிர்ந்து பார்க்க அங்கு நிகிலனை கண்டதும் உடனே சிரிப்பு மறைந்து தலையை குனிந்து கொண்டாள்.. அவளை கண்டு கொள்ளாமல் அவள் அருகில் அமர்ந்தான் நிகிலன்.. இதுவரை இவ்வளவு நெருக்கத்தில் அவன் அருகில் அமர்ந்தது இல்லை மது.. காரில் வரும் பொழுது கூட நிறைய இடைவெளி விட்டு கதவின் அருகில் ஒட்டி அமர்ந்து கொண்டாள்... இங்க வேறு வழி இல்லாததால் அவன் அருகில் அமரவ...