Posts

தாழம்பூவே வாசம் வீசு-6

Image
  தாழம்பூவே வாசம் வீசு - இப்பொழுது ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. கேட்டு பாருங்க ப்ரெண்ட்ஸ்..!   https://youtu.be/K9Zm2WD5HpU அத்தியாயம்-6 அ ந்த சிறிய   மண்டபத்தின்   உள்ளே அமரும்படி இருந்த சிறு இடத்தில் சென்று   தூணுடன் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.. எதிரில் இவனை பார்த்து குறும்புடன் சிரித்து கொண்டிருந்த தன் நண்பனை கண்டவன் கடுப்பாகி "டேய் கணேசா.. நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன் ? .. நேற்று ஒரு நாள் நான் சந்தோஷமா இருந்தது உனக்கு பொறுக்கலையா ? அதுக்குள்ள என் சந்தோஷத்தை பறிச்சுக்க னு கங்கணம் கட்டிகிட்டு வந்திட்ட ? நேற்று அந்த குட்டி தேவதையை பார்த்து   எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்.. இன்னைக்கும் பார்க்கலாம்னு வந்தா அந்த பொண்ணு இல்லை இல்லை பிசாசு என்னை என்னா விரட்டு விரட்டறா ? பழைய பகையை இன்னும் மனசுல வச்சிருக்கா போல இருக்கு.. அப்ப இனிமேல் நான் அந்த குட்டிய பார்க்க முடியாதா ? அவளை பார்க்க எனக்கு துடிக்குதே... நான் எப்படி பார்க்காமல் இருப்பேன்.. ? " என்று ஏதேதோ சொல்லி புலம்பி கொண்டிருந்தான்.. அவன் புலம்பலை கேட்டு காதில் ரத்தம் வர ஆரம்பிக்க அதற்கு மேல் தாங்க முடியாமல் அந்த

தாழம்பூவே வாசம் வீசு-5

Image
  எனது புத்தம் புதிய தொடர்கதை " கனவே கை சேர வா..."   புதிய தளத்தில் வெளியாகி உள்ளது. படிச்சு பாருங்க தோழமைகளே..!    https://padminiselvarajnovels.blogspot.com/p/kanave-kai-sera-va.html *****  வராமல் வந்த தேவதை தொடர் இப்பொழுது புதிய தளத்தில் வெளியாகி உள்ளது..! என்னுடைய புதிய தளத்தை விசிட் பண்ணி பாருங்க ப்ரெண்ட்ஸ்..! https://padminiselvarajnovels.blogspot.com/p/varamal-vantha-devathai.html அத்தியாயம்-5 அ டுத்த நாள் காலை   எழும் பொழுதே உற்சாகமாக   உணர்ந்தான் பார்த்திபன்..அதற்கு காரணம் அவன் அறிந்ததே.. காலையில் எழுந்தவன் உற்சாகமாக சிறிது நேரம் அந்த மொட்டை மாடியில்   தண்டால் எடுத்து விட்டு அந்த குளியலறையில்   வரிசையில் நின்று குளித்து விட்டு கண்ணாடி முன்னே நின்றான்.. அந்த ரசம் போன   கண்ணாடியில் அவன் முகத்தை   பார்க்க , அவனுக்கே கொஞ்சம்   பயமாக இருந்தது.. முறுக்கி விட்ட முரட்டு மீசையும் கருகருவென்று   இருந்த அவன் நிறமும் பார்க்கவே அவன் ஊர் கருப்பண்ணசாமி நினைவுக்கு வந்தார்..தன் முகத்தையே மீண்டும் உற்று பார்த்தவன் “ஓ.. இதனால் தான் எல்லா சின்ன புள்ளைங்களும் என்ன பார்த்து பயந

தாழம்பூவே வாசம் வீசு-4

Image
  எனது புத்தம் புதிய தொடர்கதை " கனவே கை சேர வா..." புதிய தளத்தில் வெளியாகி உள்ளது. படிச்சு பாருங்க தோழமைகளே..!  https://padminiselvarajnovels.blogspot.com/2022/09/kanave-kai-sera-va-1.html *****  வராமல் வந்த தேவதை தொடர் இப்பொழுது புதிய தளத்தில் வெளியாகி உள்ளது..! என்னுடைய புதிய தளத்தை விசிட் பண்ணி பாருங்க ப்ரெண்ட்ஸ்..! https://padminiselvarajnovels.blogspot.com/p/varamal-vantha-devathai.html அத்தியாயம்-4 வீ ராச்சாமி பேசி முடித்ததும் போனை அணைத்தவன் அதை தூக்கி எறிய வேண்டும் போல கோபம் கொப்பளித்தது உள்ளுக்குள்... ஆனால் அதே நேரம் அந்த குட்டியின் சிரித்த முகம் மீண்டும் நினைவு வர , உடனேயே தன் கோபத்தை அடக்கி கொண்டான்... “ஹ்ம்ம்ம்ம் அந்த   சாமி என்னவோ தேவதை   வரப்போறா னு சொன்னார்.. அதே போல அந்த குட்டி தேவதையும் வந்திட்டா.. ஆனால் என்   நிலைமை ல ஒரு மாற்றமும் இல்லை.. முன்னைக்கு இப்ப   இன்னும் மோசமாதான் போகுது... இந்த ஓனர் வேற இப்படி படுத்தறானே.. இவன் கிட்ட ரொம்ப நாளைக்கு குப்ப கொட்ட முடியாது போல இருக்கே...எல்லாம் என் தலையெழுத்து...   “ என்று புலம்பியவன்   தலையில் கை வைத்து அமர ,

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!