தவமின்றி கிடைத்த வரமே-35
அத்தியாயம்-35 ம றுநாள் காலை கண் விழித்த பனிமலர் எழ முயல, அவள் நகர முடியாமல் தன்னை சுற்றி இறுக்கி அணைத்திருந்த கைகளை கண்டாள்...திடுக்கிட்டு திரும்பி முகம் பார்க்க அருகில் தன் கணவனின் முகம் காண, அப்பொழுது தான் நேற்று இரவு சம்பவங்கள் நினைவு வந்தன.. அவனின் இறுகிய அணைப்பும் முரட்டுத்தனமான முத்தமும் காட்டாறு போன்ற வேகமும் நினைவு வர, மீண்டும் உள்ளுக்குள் சிலிர்த்தது... வெளியில் பார்க்க மென்மையாக இருந்தாலும் அவனுள் இருந்த முரட்டுத் தனமான இன்னொருவனை கண்டாள்...அந்த முரட்டு அணைப்பில்தான் இன்னும் கரைந்து போனாள்.. அமைதியாக உறங்கும் தன் கணவனையே சிறிது நேரம் ரசித்து இருந்தவள் “என் க்யூட் மெக்கானிக்.... “ என்று மெல்ல அவன் கன்னத்தை பிடித்து கிள்ளியவள் அவன் புரளும் அரவம் கேட்க உடனே வெட்கபட்டு அவன் கையை விலக்கிவிட்டு வேகமாக எழுந்து குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்... குளித்து முடித்து ஒரு புடவையை கட்டிக் கொண்டு கீழ வர, வழக்கம் போல சமையல் அறையில் நின்றிருந்தார் மீனாட்சி...நேராக அவரிடம் சென்றவள் “குட் மார்னிங் அத்தை.. “ என்றாள்... ஏனோ அவளால் அவர் முகம் பார்க்க முடியவில்லை.. காலையிலயே குளித்த...