காதோடுதான் நான் பாடுவேன்-11
அத்தியாயம்-11 அ ந்தி சாயும் மாலைப்பொழுதில் தன் மகன் மகள் மற்றும் மருமகளுடன் அந்த வேலன் சன்னதி முன் கண் மூடி நின்றிருந்தார் சிவகாமி...தன் அருகில் ஜோடியாக நின்றிருந்த தன் மூத்த மகனையும் மருமகளையும் காண அவர் மனமெல்லாம் நிறைந்து நின்றது... 31 வயது ஆகியும் திருமணத்தை மறுத்து வேண்டாம் என்று முரண்டு பண்ணிய தன் மூத்த மகன் எங்கே இப்படியே தனிமரமாக இருந்து விடுவானோ?? என்று அஞ்சிய அந்த தாய்க்கு அவனை மணக்கோலத்தில் பார்த்த பொழுதே மனதுக்குள் பெரும் நிம்மதி மற்றும் அளவில்லா மகிழ்ச்சி.... இதை நடத்தி கொடுத்து தன் குறையை போக்கிய அந்த வேலனுக்கு பால் அபிசேகம் பண்ணவே இப்பொழுது அந்த வேலன் முன்னால் நின்று கொண்டிருக்கிறார் சிவகாமி.... மதுவின் வீட்டில் மதியம் சாப்பாடு முடிந்ததும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்த நிகிலன் எப்பவும் போல வெளியில் சென்று விட்டு 5 மணிக்கு திரும்பி வர, சிவகாமி மதுவின் பிறந்த நாளுக்கு முருகன் கோவிலுக்கு சென்று அபிசேகம் செய்யணும் என்று அடம் பிடித்து நிகிலனை இந்த கோவிலுக்கு அழைத்து வந்திருந்தார்... தன் மாமனார் மாமியார் முன்னால் தன் அன்னை கேட்க, அதற்கு மறுத்து சொல்ல முடியாமல் தன்...