உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-14
அத்தியாயம்-14 மா லை 4 மணி அளவில் பவித்ரா வரவேற்பறையில் அமர்ந்து டீ வி சேனல் ஒவ்வொன்றாக மாற்றி வைத்துக் கொண்டிருந்தாள்... சாப்பிட்ட உடன் மதியம் தூங்கும் பழக்கம் இல்லாததால் ரொம்ப போர் அடித்தது அவளுக்கு... டீ வி யிலும் எதுவும் உருப்படியாக இல்லாததால் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டிருந்தாள்... அவள் கைகள் மட்டும் ரிமோட்டை அழுத்திக் கொண்டிருக்க அவள் மனமோ ஆதியை சுற்றியே வந்தது... அவனிடம் சொன்ன சவாலில் எப்படி ஜெயிப்பது??? எப்படி அவனை தன் மனைவியாக ஏற்க வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்... எப்படி அவன் வெளித்தொடர்பை கட் பண்ணுவது என்று தீவிரமக யோசித்துக் கொண்டிருந்தாள்... அவளின் அந்த தீவிர யோசனையில் ப்ரேம் உள்ளே வந்ததை கவனிக்கவில்லை... திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து ஆதியைக் காண அவன் வீட்டிற்கு வந்திருந்தான் ப்ரேம்... உள்ளே வந்தவன் பவித்ரா வரவேற்பறையில் அமர்ந்து இருக்கவும் அவள் அருகில் சென்று “ஹலோ சிஸ்டர்.. எப்படி இருக்கீங்க?? “ என்று புன்னகைத்தான்... அவனை யாரென்று தெரியாமல் முதலில் முழித்தாலும் பின் அவனை அடையாளம் கண்டு கொண்டவள் “ஐம் பைன் ப்ரதர்.. நீங்க எப...