காதோடுதான் நான் பாடுவேன்-25
அத்தியாயம்-25 அ தற்குள் மாப்பிள்ளை ஓடிவிட்ட செய்தி இலேசாக பரவ ஆரம்பிக்க, அந்த செய்தி மதுவுக்கும் எட்ட, அவள் மனதுக்குள் குத்தாட்டம் போட்டு துள்ளி குதித்தாள்... “வாவ்.. சூப்பர் வேல்ஸ்.. நீதான் என் பெஸ்ட் பிரண்ட்.. எங்கப்பா அம்மா கூட நான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னத காதுலயே போட்டுக்கல.. ஆனா பார் நீ மட்டும் என் பக்கம் நின்னு இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்காக அந்த மாப்பிள்ளையையே ஓட வச்சுட்டியே... நீதான் கிரேட்.. Thank you so much வேல்ஸ்.. I love you..” என்று உள்ளுக்குள் மகிழ்ந்தவள் அதை வெளியில் காட்டாமல் கஷ்டபட்டு அடக்கி கொண்டு முகத்தை இலேசாக சோகமாக வைத்து கொண்டாள்.... ஆனால் அவள் மகிழ்ச்சியின் ஆயுட்காலம் சில நிமிடங்கள் தான் என்று அறிய வில்லை அவள்... மாப்பிள்ளை ஓடி போய்ட்டான் என்ற செய்தி மதுவின் சொந்தக்காரர்களிடம் பரவ, வம்பு பேசும் பெண்கள் வாய்க்கு அவல் கிடைக்க மணமகள் அறையை நோக்கி படையெடுத்தனர்... உள்ளே வந்தவர்கள் எல்லாம் மதுவை பாவமாக பார்த்தனர்... சிலரோ எதுக்காக மாப்பிள்ளை இப்படி மகாலட்சுமி மாதிரி இருக்கிற பொண்ணை வேண்டாம் னு ஓடி போய்ட்டான் ?? என்று தங்கள் ஆராய்ச்சியை தொடங்கினர்... ஒ...