காதோடுதான் நான் பாடுவேன்-30
அத்தியாயம்-30 அ டுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தாள் மது... சென்ற வாரம் அந்த இல்லத்திற்கு சென்று வந்ததில் இருந்தே அவள் மிகவும் மகிழ்ச்சியாக வளைய வருகிறாள்.. மாலை தன் வகுப்பில் இருந்து திரும்பி வந்ததும் தன் மாமியார் இடம் கதை அடிப்பவள் தன் பெற்றோரிடமும் பேசிவிட்டு, மறக்காமல் ரமணிக்கும் போன் பண்ணி அவரிடம் தன் அன்றைய கதையை சொல்லுவாள்.. ரமணிக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...தன்னை அவரின் மகள் என்று கூறியவள் வாய் வார்த்தையோடு நிக்காமல் அதையே நிரூபிக்க தினமும் தன்னை அழைத்து பேசும் மதுவை நினைத்து பெருமையாக இருந்தது..அவரும் அவளுடன் சிரித்து பேச ஆரம்பித்திருந்தார்.... சிவகாமிக்கும் அதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.... “எப்படியோ தன் மருமகள் இந்த அழுமூஞ்சி ரமணியையே மாற்றி சிரிக்க வைத்துவிட்டாளே.. “ என்று... அவளிடமும் அதை சொல்லி பாராட்டினார்... மதுவும் புன்னகைத்து “அத்தை... நீங்க என்னை பாராட்டறதுக்கு பதிலா எனக்கு ஒரு சின்ன உதவி செய்யுங்களேன்... “என்று பொடி வைத்தாள் தன் மாமியார்க்கு.... “என்ன உதவி அது இது னு.. என்ன வேணும்னு தயங்காம கேள் மருமகள...