என் மடியில் பூத்த மலரே-29
அத்தியாயம்- 29 கா லையில் கண் விழித்தவள் ஆதியின் கை தன்னை சுற்றி அணைத்திருப்பதை கண்டு திகைத்தாள்...மீண்டும் ஒரு முறை தன் கண்ணை நன்றாக தேய்த்துக் கொண்டு நன்றாக உற்று பார்த்தாள்... அவனே தான் அவளை கட்டி கொண்டு தூங்கி கொண்டிருந்தான்... சிறு பிள்ளையாக பிடிவாத குணத்துடன் தூங்கும் அவனையே சிறிது நேரம் ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.. அவளின் பார்வை அவன் உதட்டை தழுவ, தூங்கும்பொழுதும் அதே போல பிடிவாத குணத்துடன் இருந்தன அவன் இதழ்கள்… அவளுக்கு அவன் உதட்டை வருட கைகள் துடித்தன.. அதற்குள் தன்னை சமாளித்துகொண்டு “அவனை தொட்டு பார்ப்பது, தூங்கற சிங்கத்தை எழுப்பற மாதிரி.. வேணாம் காலையிலயே அவன் கிட்ட வாங்கி கட்டிக்கணும்..” என்று தன்னை கட்டு படுத்தி கொண்டவள் இன்னும் அவன் அருகில் நெருங்கி படுத்துகொண்டு அவன் விடும் மூச்சு காற்றை அனுபவித்தாள்... பின் நேரம் ஆவதை உணர்ந்து மெல்ல அவன் கையை விளக்கினாள்.. அவனோ இன்னும் அவளை இறுக்கி கொண்டான்.. அவனின் முரட்டுத்தனமான கையை மீண்டும் தன் பலத்தைக் கொண்டு மெல்ல தூக்கி அவன் தூக்கம் களையாமல் அவன் மேல் வைத்து விட்டு குளியல் அறைக்குள் சென்றாள்.. பின் குளித்து முடித்த...