தவமின்றி கிடைத்த வரமே-14
அத்தியாயம்-14 அ ழகிய மெரூன் கலரில் இன்றைய மாடலில் டிசைன் செய்ய பட்ட பார்டருடன் மின்னிய பட்டுபுடவை சரசரக்க, கழுத்தில் கனமான சம்மங்கி பூக்களால் ஆன மாலை அணிந்து அதைவிட கனமான புது மஞ்சள் கயிற்றால் கோர்த்து அணிந்திருந்த தாலி முன்னால் தொங்க, தயக்கத்துடன் தன் வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டின் உள்ளே வந்தாள் மணக்கோலத்தில் இருந்த பனிமலர்... அவள் அருகில் ஆறடிக்கும் மேலான உயரத்தில் , பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக பார்ப்பவர்களை கட்டி இழுக்கும் வசீகர தோற்றத்தில் மணக்கோலத்தில் இருந்த அந்த நெடியவனும் பனிமலருக்கு இணையாக தன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தான்.... அவன் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு... இந்த உலகத்தையே வென்றுவிட்ட கர்வம் முகத்தில் தெரிய, அவன் உதடுகள் அவன் மகிழ்ச்சியை புன்னகையாக்கி விரிய விட முயல ஆனால் ஏனோ அதை கஷ்டபட்டு அடக்கி புன்னகைக்காமல் சாதாரணமாக இருப்பதாக கஷ்டபட்டு தன்னை கட்டுபடுத்தி கொண்டான்... உள்ளே வந்த மணமக்களை நேராக பூஜை அறைக்கு அழைத்து சென்று அந்த வீட்டு புது மறுமகளை விளக்கேற்ற சொல்ல, அவளோ இன்னும் தயக்கத்துடன் நடுங்கும் விரல்களுடன் அந்த தீபெட்டியை உரசி...