உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-13
அத்தியாயம்- 13 தா ன் ஹோம் மினிஸ்டர் பதவியை ஏற்ற பின் செய்யும் முதல் வேலை என்பதாலும், முதல் முதலில் அவனுக்கு சமைப்பதாலும், சமையல் செய்யும் வள்ளியையும் இன்னொரு பெண்ணையும் துணைக்கு வைத்து கொண்டு அந்த கிச்சனையே தலைகீழாக புரட்டி கொண்டிருந்தாள் பவித்ரா... ஆதித்யா வாங்கி கொடுத்திருந்த ஐ-போனில் ஒவ்வொரு ரெசிபியாக தேடி அதை வள்ளியிடம் விளக்கி கொண்டிருந்தாள்... அவள் சொல்லுவதை வள்ளியும் அப்படியே செய்தாள்... அதை செய்து கொண்டிருக்கும் பொழுதே வள்ளியின் முகத்தில் ஒரே யோசைனயாக இருந்தது... இதை கேட்கலாமா வேண்டாமா என்று பட்டி மன்றம் நடத்தி பின் வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.. பவித்ராவும் தான் இருந்த பிசியில் வள்ளியின் முகத்தில் தோன்றிய அந்த சந்தேக ரேகைகளை கவனிக்கவில்லை... இரண்டு மணி நேரம் போராடி ஒரு வழியாக மதிய உணவை தயாரித்தனர் மூவரும். பின் அனைத்தையும் கொண்டு வந்து டைனிங் டேபிலில் வைத்தனர்... பவித்ரா அதற்கு மேலும் கொஞ்ச டெகரேசன் செய்தாள்.. மீண்டும் ஒரு முறை எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று சரி பார்த்து திருப்தி அடைந்தவளாக ஆதித்யாவை சாப்பிட அழைக்க சென்றாள்.. அவன் அலுவலக அறையை...