காதோடுதான் நான் பாடுவேன்-20
அத்தியாயம்-20 யா ர் அந்த ரமணி என்று தன் மருமகள் கேட்ட கேள்விக்கு சிறிது நேரம் அமைதியாக இருந்து பின் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு கொண்ட சிவகாமி “ரமணி உன் புருசனோட பிரெண்ட் கௌதம் இருக்கானே அவனோட அம்மா...” என்றார்... அதை கேட்டதும் இராவணனால் சிறைபிடிக்க பட்ட சீதையை காண தூது சென்ற அனுமன் இலங்கை சென்று திரும்பி வந்ததும் அவனை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தான் இராமன்... அனுமன் என்ன செய்தி சொல்லப் போறானோ என்று படபடப்புடனும் கவலையுடனும் இருந்த இராமனின் கவலையை போக்கும் வன்னம் கண்டேன் சீதையை... என்று ஒரே வரியில் இராமனின் கவலையை போக்கி அவன் மனதை குளிர செய்த அந்த அனுமனை போல, தன் மாமியார் என்ன சொல்ல போகிறாரோ என்ற படபடப்புடனும் ஒரு வித அச்சத்துடனும் இருந்த மதுவிற்கு சிவகாமியின் சொற்கள் அமுதமாய் காதில் விழுந்தது.. அவள் மனதிற்குள் இருந்து வந்த ஒரு பெரும் பாரம் நீங்கி நிம்மதி வந்து சேர்ந்தது.. ரமணி கௌதமின் அம்மா என்று சிவகாமி சொல்லியதை கேட்டதும் நிம்மதி அடைந்த மது அவரால் இவருக்கு என்ன பிரச்சனை?? என்று இப்பொழுது ஒரு சுவாரஷ்யத்துடன் சிவகாமியின் முகத்தைப் பார்த்தாள் அடுத்து அவர் என்ன சொல்ல ப...