காதோடுதான் நான் பாடுவேன்-26
அத்தியாயம்-26 அ ன்று ஞாயிற்றுகிழமை... இந்த ஒரு நாள் மட்டும் எல்லோரும் நீண்ட நேரம் உறங்கி தாமதமாக எழுந்து சோம்பலாக காலை பணிகளை செய்வது வழக்கம்... அந்த சோம்பல் ஞாயிற்றுகிழமை மதிய வேளையில் நிகிலன் காரை ஓட்டி கொண்டிருக்க, முன் இருக்கையில் அவன் அருகில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் மது... அவள் மனமோ மகிழ்ச்சியில் குதித்து கொண்டிருந்தது... பின்ன இருக்காதா?? தன் திருமணத்திற்கு பிறகு தன் கணவனுடன் அதுவும் அபீசியல் விட்டு பெர்சனல் க்காக வெளியில் செல்வது இதுதான் முதல் முறை... மற்ற நாட்களில் வேறு ஏதாவது அவள் படிப்புக்காகவோ இல்ல ஸ்போர்ட்ஸ் சம்பந்தமாகத்தான் அதுவும் சில முறை மட்டுமே அவளை தன்னுடன் அழைத்து சென்றிருக்கிறான்...... இது மாதிரி சொந்த வேலைக்காக அதுவும் விருந்துக்காக என்று இருவரும் எங்கயும் தனியாக சென்றதில்லை... திருமணம் முடிந்து மறுவீட்டு அழைப்புக்காக ஒரு முறை தன் தாய் வீட்டுக்கு சென்று வந்ததுதான்.. அதன் பிறகு எத்தனையோ உறவினர்கள் விருந்து கொடுக்க அழைத்தார்கள் தான்.. அப்பொழுது இருவருமே தங்கள் திருமணத்தை வெறுத்து வேறவேற மனநிலையில் இருந்ததால் நிகிலன் வேலை இருப்பத...