தவமின்றி கிடைத்த வரமே-7
அத்தியாயம்-7 ப னிமலர் முன்னால் செல்ல பின்னால் அவள் வண்டி ஓட்டும் அழகையே ரசித்த வண்ணம் காரில் பின் தொடர்ந்தான் வசீகரன்.. அந்த மருத்துவமனையை அடைந்ததும் இருவரும் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அந்த மருத்துவமனைக்குள் உள்ளே செல்ல, எதிரில் வருபவர்கள் வசியை அடையாளம் கண்டு கொண்டு அவனுக்கு விஷ் பண்ணினர்... அவனும் புன்னகைத்தவாறு முன்னே நடந்தான்... மலருக்கு ஆச்சர்யமாக இருந்தது.. “எப்படி எல்லாருக்கும் இவனை தெரிந்திருக்கிறது ?? என்று.. அவள் அறியவில்லை.. வசி அந்த மருத்துவமனைக்கு விசிட்டிங் டாக்டர்... வாரத்தில் ஒரு நாள் மட்டும் அங்கு வருவான்.. அதோடு கிரிட்டிகல் அன்ட் காம்ப்ளக்ஷ் ஆன ஹார்ட் சர்ஜரிக்கு அவனைத்தான் அழைப்பார்கள்... எல்லாவித இதய நோய்க்கும் அவன் புகழ்பெற்று விழங்குவதால், அவன் வரும் அந்த ஒரு நாளில் மட்டும் பேசன்ட்ஸ்கள் எண்ணிக்கை நிரம்பி வழியும்.. கலெக்சனும் கூடத்தான்... வழியில் பார்க்கும் சில டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை கூட புன்னகையுடன் எதிர் கொண்டு முன்னே நடந்த அவனை காணவே அவளுக்கு வியப்பாக இருந்தது... இங்கயே பல டாக்டர்களை பார்த்திருக்கிறாள்.. ஏனோ அவர்களுக்கு கொம்பு வந்த...