காதோடுதான் நான் பாடுவேன்-10
அத்தியாயம்-10 தி ருமணத்திற்கு பிறகு முதல் முதலாக இருவரும் தனியாக செல்லும் கார் பயணம் அது..இதுவே நல்லபடியாக திருமணம் முடிந்திருந்தால் இந்த பயணம் அவ்வளவு சுகமானதாக இருந்திருக்குமோ ?? ஆனால் கார் கதவை திறக்கும் பொழுதே தன் கணவனாகியவன் கடித்ததில் மிரண்டவள் உள்ளே அமர்ந்ததும் கார் கதவை ஒட்டி அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள் மதுவந்தினி... அவள் கணவனோ விரைத்த உடலுடன் சாலையை நேராக பார்த்தவாறு காரை செலுத்தி கொண்டிருந்தான்... சிறிது நேரம் வெளியில் வேடிக்கை பார்த்து வந்தவள் தன் மாமியார் சொன்னது நினைவு வர இப்பொழுது சுற்றிலும் எதையோ தேட ஆரம்பித்தாள்.. ஓரக்கண்ணால் அவளை பார்த்து கொண்டே வண்டியை ஓட்டியவன் சாலையின் இரு பக்கமும் பார்வையிட்டு கொண்டே சென்றான்... வேடிக்கை பார்த்து வந்தவள் திடீரென்று “சார்... சார்... சார்... காரை நிறுத்துங்க... “ என்று கத்தினாள் மது... அவளின் அலறலை கேட்டு திடுக்கிட்டவன் பின்னால் வண்டி எதுவும் வருகிறதா என்று ரியர்வ்யூவில் பார்த்து உறுதி செய்து கொண்டு தன் காரை ஓரமாக நிறுத்தினான்.. பின் அவளை பார்த்து “ஏய்... எதுக்கு இப்படி கத்தற??... கார் ஓட்டறப்ப இப்படி...