என் மடியில் பூத்த மலரே-17
அத்தியாயம்-17 இரண்டாம் மாதம்: இரண்டு மாதங்களுக்கு பிறகு அன்று அதிகாலையிலயே விழிப்பு வந்தது ஆதித்யாவிற்கு... மெத்தையில் இருந்து எழும்பொழுதே ஒரு வித உற்சாகமாக இருந்தது அவனுக்கு.. என்னவென்று தான் புரியவில்லை... எழுந்தவன் விசில் அடித்துக்கொண்டே காலை உடற்பயிற்சிகளை முடித்தான்... பின் தன் அலைபேசியில் ஏதோ செய்தி வரவும் அதை எடுத்து பார்த்தான்..... பார்த்தவன் “ஆஹா....வாவ் “ என்று துள்ளி குதித்தான்.... அவனுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருந்தது அதில்.. ரொம்ப நாட்களாக அவன் எதிர்பார்த்து கிடைக்காமல் போக இருந்தது மீண்டும் அவனுக்கே கிடைத்து விட்டது.... அதனால தான் இன்று எழும்பொழுதே இவ்வளவு சந்தோஷமாக இருந்ததோ!!.. இனி எல்லாம் சுகமே என்று பாடிக்கொண்டே கிளம்பி கீழே சென்றான்... ஜானகியும் அப்பொழுதுதான் தன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் அதை வைத்தவரின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்... அவரும் ஆதி மாதிரியே துள்ளிக் குதித்தார் மனதில்.... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சிரித்தனர்.... ஒரே நேரத்தில் இருவரும் ‘குட் நியூஸ்’ என்றனர்... “எப்படி அதுக்குள்ள இவனுக்கு தெரிந்தது” என்று ஜானகியும் “எப்ப...