Posts

Showing posts from September, 2021

நிலவே என்னிடம் நெருங்காதே!!-10

Image
  அத்தியாயம்-10 கா லையில் எழுந்ததும் நேற்றைய சம்பவங்கள் கண் முன்னே வர , அதுவும் அவன் கத்தியதற்கு அவள் திமிராக சென்று தரையில் படுத்து கொண்டதும் நினைவு வர , காலையிலயே அவன் உள்ளே கொதிக்க ஆரம்பித்தது... அதனால் தன் காரை எடுத்து கொண்டு கை போன போக்கில் காரை விரட்டிவிட்டு கொஞ்சம் ஆத்திரம் குறைந்ததும் வீட்டிற்கு திரும்பி வந்திருந்தான்.. வீட்டிற்கு உள்ளே வரும்பொழுதே எல்லாரும் உணவு மேஜையில் இருப்பது தெரிந்தது... ஏனோ அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அவனுக்கு பிடிக்கவில்லை.. நேராக தன் அறைக்கு செல்லத்தான் எண்ணி வந்தான்.. ஆனால் டைனிங் ஹாலில் அவள் அமர்ந்து இருக்க அதை கண்டு உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது.. அதுவும் அவள் அவன் தாத்தாவின் அருகில் அவன் இடத்தில் அமர்ந்து இருக்க அதை கண்டு பொங்கியவன் நேராக டைனிங் ஹாலுக்கு வந்து கத்த ஆரம்பிக்க அவளும் பயந்து போய் எழுந்து இருக்கை மாற்றி அமர , தன் தாத்தாவுக்கு எதிரான முதல் வெற்றி என உள்ளுக்குள் கொக்கரித்தான் அதிரதன்.. தேவநாதனோ.. “பார்த்தியாடா..!!   உன்னை எப்படி இந்த உணவு மேஜைக்கு இழுத்து வந்தேன்.. ஆடற மாட்டை ஆடி கறக்கணும்.. பாடற மாட்டை பாடித்தான

அழகான ராட்சசியே!!!-16

Image
  அத்தியாயம்-16 “ சே ..எவ்வளவு தைர்யம் அவனுக்கு ? ..எல்லாரும் அவனை நல்லவன் வல்லவன் னு புகழ்ந்ததை வச்சு நானும் அவனை போய்  நல்லவன் னு நினைச்சிருந்தால் இப்படி அவன் புத்தியை காட்டிட்டானே.. எவ்வளவு தைர்யம் ? .. இந்த சந்தியா இடுப்புலயே கை வச்சிட்டானே... அவனை எல்லாம் ஒரு அறையுடன் நிறுத்தி இருக்க கூடாது.. துபாய் ல செய்யற மாதிரி நடு ரோட் ல நிக்க வச்சு சுடணும்... ராஸ்கல்.. “ என்று பல்லை கடித்தாள் சந்தியா...  மகிழன் மற்றும் சந்தியா பங்கு பெற்ற ஃபேஷன் ஷோ நிறைவு பெற்றதும் அந்த மேடையை ஒட்டி இருந்த அறைக்குள் சென்ற சந்தியா அவசரமாக வெளி வர , அதே நேரம் மகிழன் உள்ளே வர , அவள் கால் தடுக்கி கீழ விழாமல் இருக்க மகிழன் அவள் இடையை பிடிக்க , அதில் வெகுண்டவள் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்... அறைந்தவள் கோபம் கொப்புளிக்க , வேகமாக அங்கிருந்து வெளியேறியவள் அருகில் இருந்த ரெஸ்ட் ரூமிற்குள் புகுந்தவள் அங்கு இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டு மகிழனை திட்டி கொண்டிருந்தாள்.. அவள் கோபம் , ஆத்திரம் எல்லாம் சேர்த்து இல்லாத வார்த்தையெல்லாம் தேடி பிடித்து அவனை திட்டினாள் அவள்  ஆத்திரம் தீர .. .ஆனாலும் அவள

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!