காதோடுதான் நான் பேசுவேன்-29
அத்தியாயம்-29 வெ ளியில் சென்றிருந்த நிகிலன் திரும்பி வரவும் கதைவை தட்டி உள்ளே வர, அங்கு ரமணியை சிரித்த முகத்துடன் அதுவும் தான் அவருக்காக பார்த்து பார்த்து வாங்கியிருந்த புடவையில் பார்க்க கண்களை அகல விரித்தான் ஆச்சர்யத்தில்... அவரின் அருகில் வந்தவன் “என்ன மா இது அதிசயம்??... இவ்வளவு சூப்பரா இருக்கீங்க... அப்படியே 10 வயது குறைஞ்சுபோச்சு... எனக்கு அக்கா மாதிரி ஆயிட்டீங்க... “ என்று சிரித்தான் அதை கேட்டு அதிசயித்த ரமணி மதுவை பார்க்க அவளும் பார்த்தீங்களா?? என்று கண்ணடித்து சிரித்தாள்.. “என்னம்மா ரகசியம்?? எதுக்கு அவளை பார்க்கறீங்க?? “ என்றான் புரியாதவனாக.. “அது வந்து கண்ணா.. நீ என்னை பார்த்து இப்படித்தான் சொல்லுவ னு மது சொன்னா... பார்த்தா அதே மாதிரி நீ சொல்ற .. அதான் அவ சிரிக்கிறா.. “என்று சொல்லி சிரித்தார் ரமணி... இன்னும் ஆச்சர்யமாக இருந்தது ரமணி அப்படி சிரிப்பது.. .நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் மனம் விட்டு சிரித்து பார்க்கிறான்... “எப்படியோ கண்ணா... இதே மாதிரி உன் மனச அறிந்து இரண்டு பேரும் ஒரே சிந்தனையோடு இருக்கணும்.. “ என்று வாழ்த்தினார்.. அதற்குள் கௌதம் அந்த புது ட்ரெஸ் ஐ போட்டுக...