புத்தகம் மூடிய மயிலிறகே...!
அன்பான வாசக தோழமைகளே! , அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த வருடம் அனைவருக்கும் சிறப்பாய் அமைய எனது வாழ்த்துக்கள்!! என்னுடைய புதிய நாவல் புத்தகம் மூடிய மயிலிறகே...! Amazon ல் தற்பொழுது வெளியாகி உள்ளது. நேரம் இருந்தால் என்னுடைய இந்த புதிய நாவலை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள். காதல் என்றால் எட்டிக்காயாக முகத்தை சுளிக்கும் நாயகியையும் , காதலை ஆராதித்து, இனிக்க இனிக்க திகட்ட திகட்ட காதலிக்கும் நம் நாயகனையும் சேர்த்து வைத்து மதிப்பிற்குரிய திருவாளர் விதியார் ஆடும் ஆட்டம் தான் புத்தகம் மூடிய மயிலிறகே...! கதை சுருக்கம்: நாயகி மிருணாளினி: காதல் மீது நம்பிக்கை இல்லாதவள். காதலை வெறுப்பவளும் கூட. சந்தர்ப்பவசத்தால் எழுத்தாளர் மானசீகன் நாவல்களை படிக்க நேரிடுகிறது. மானசீகன் நாவல்கள் அனைத்தும் காதலை ஆராதித்து , இறந்து போன தன் காதலிக்காக எழுதியவை. அவனுடைய சுயசரிதையை படித்தவள் , தன்னை மறந்து அவனுடைய எழுத்தில் மயங்கி போகிறாள். அவன் நாவல்களை படித்த பிறகு , அவன் காதலி மீ...