என் மடியில் பூத்த மலரே-18
அத்தியாயம்-18 மூன்றாவது மாதம்: ஒரு நாள் இரவு பாரதி வரவேற்பறையில் அமர்ந்து கையில் ஒரு புத்தகத்தை வைத்து சுவராஷியமாக படித்துக்கொண்டிருந்தாள்.. அவள் இருந்த சுவராஷியத்தில் வாயிலில் அழைப்பு மணி இரண்டு முறை அடித்து நின்றதை கவனிக்கவில்லை.. மூன்றாவது முறையாக விடாமல் அடிக்கவும் வேகமாக எழுந்து தான் படித்து கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு வேகமாக வாசலுக்கு விரைந்தாள்.... கதவை திறந்ததும் அங்கு ஒரு நெடியவன் இவளை கோபமாக முறைத்தபடி நின்று கொண்டிருந்தான்... இருவர் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தது ஒரு சில விநாடிகள்... அதற்குள் “ஹலோ .... பெல் அடிச்சா வந்து கதவு திறக்க இவ்வளவு நேரமா??” என்று கோபமாக திட்டிக்கொண்டே அவளை பின்னே தள்ளி விட்டு உள்ளே வந்தான்... ஒரு சில விநாடிகள் அவன் பார்வையில் கலந்து திகைத்து நின்றவள் பின் சுதாரித்து கொண்டு “யார் இவன்?? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே “ என்று மூளையை கசக்கியவள் சரியாக ஞாபகம் வராததால் அவன் பின்னே வேகமாக சென்று அவன் முன்னே வழியை மறித்து நின்றவள் “ஹலோ!! மிஸ்டர்.. யார் நீங்க?? யார் வேணும்.. இப்படி அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழையலாமா?? ... ” என்...