Posts

Showing posts from June, 2022

தேடும் கண் பார்வை தவிக்க-14

Image
  அத்தியாயம்-14 ஒ ரு நாள் முகம் பார்த்து தலை வாரி கொண்டிருக்க , அப்பொழுது தான் அவன் முகத்தை உற்று பார்த்தான்.. மூக்குக்கு கீழ முடி வளர ஆரம்பித்து கோடாக வளர்ந்திருந்தது... அதை கண்டதும் தான் அவனுக்கு மீசை வந்திருப்பது புரிய அவனுக்கு வெட்கமாகவும் பெருமையாக இருந்தது.. அவன் அப்பாவை போல மீசையை நீவி விட்டு கொண்டு கண்ணாடியில் பார்த்து சிரித்தான்... தன் மீசையை பார்த்து வெட்கபட்டு கொண்டு அடுத்த ஒரு வாரம் தன் அத்தை மகளை பார்க்க செல்லவில்லை நளன்.. தமயந்தியோ அவனை காணாமல் அதுவும் தினமும் அவன் வாங்கி வரும் சாக்லெட் கிடைக்காமல் போக அவன் வரும் வழியையே பார்த்து கொண்டு ஏமாந்து போனாள்.. அந்த வார இறுதியில் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளாகவே தன் அன்னையிடம் சென்று “அம்மா... நான் மாமா வூட்டுக்கு போய்ட்டு வரவா ? “ என்று ரகசியமாக கேட்க அதை கேட்டு தங்கத்திற்கு மனம் குளிர்ந்து போனது... உடனே தன் அண்ணன் மகனுக்கு பிடித்த பக்கோடா மற்றும் இனிப்பு போண்டா என்று செய்து டப்பாவில் போட்டு கொடுத்து “தமா... அப்பத்தா தூங்கி எழுந்துக்கறதுக்கு முன்னாடி போய்ட்டு வந்துடு டீ...” என்று ரகசியமாக சொல்லி தன் மகளை அனுப்பி வைத்தாள்.

தேடும் கண் பார்வை தவிக்க-13

Image
  அத்தியாயம்-13 த ன் புல்லட்டை ஸ்டார்ட் பண்ணி வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் காத்திருந்தான் தங்கராசு..   அடர் நீல நிற டிராயரும் அதற்கு மேல் ஸ்கை ப்ளூ கலர் சட்டையும் அணிந்து சட்டையை இன் பண்ணி பெல்ட் ஐ இடுப்பில் சுற்றி ட்ராயர் கழண்டு விடாமல் இறுக்கமாக இழுத்து மாட்டிக்கொண்டு முதுகுக்கு பின்னால் ஸ்கூல் பேக்கை சுமந்து கொண்டு தன் அன்னையின் கையை பிடித்துகொண்டு  வாயிலை நோக்கி மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டு  இருந்தான் நளன்... ஆனால் அவன் முகம் மட்டும் கவலையால் வாடிப்போய் கிடந்தது...   "கண்ணு... அப்பா ரொம்ப நேரமா வாசல்ல காத்துகிட்டு இருக்காங்க...  மெதுவா நடந்தன திட்ட ஆரம்பிச்சிடுவார்... சீக்கிரம் வா கண்ணு.. “  என்று அவன் கையை  பிடித்து இழுத்தபடி வேகமாக நடந்து வந்தாள் கண்ணம்மா.. புல்லட்டின் அருகில் வந்ததும் தன் மகனின் தொங்கிப் போன முகத்தை கண்ட தங்கராசு "ஏன் டா.. உன்   மூஞ்சி இப்படி சொங்கி போய் இருக்கு.. புது பள்ளிக்கூடம் போகணும்னு பயமா இருக்கா ? “  என்றான்  தங்கராசு அக்கறையாக.. “இல்லை........ “  என்று இருபக்கமும் தலையை ஆட்டினான் நளன் அதே வாடிய முகத்தை வைத்துக் கொண்டு “பின்ன எதுக்குடா மூ

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!