Posts

Showing posts from October, 2021

நிலவே என்னிடம் நெருங்காதே!!-16

Image
  அத்தியாயம்-16 இ னிமேல் நீங்க கவனமா இருக்கணும் தாத்தா.. இது உங்களுக்கு வந்திருக்கிற முதல் அட்டாக்... நல்ல வேளையா பக்கத்துல ஆள் இருந்ததனால் உங்கள சரியான நேரத்துக்கு கொண்டு வந்து சேர்க்கவும் எங்களால உங்களை காப்பாற்ற முடிந்தது.. இதுவே இன்னும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால்................. ? “ என்று இழுக்க , அதை கேட்டு அருகில் நின்று கொண்டிருந்த அதிரதன் உடல் ஒரு முறை நடுங்கியது.. அவன் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி , வேதனை வந்து போனது.. தன் பேரனின் உடல் இறுகியதையும் அவன் முகத்தில் வந்து போன மாற்றத்தையும் ஓரக்கண்ணால் கண்டு கொண்ட தேவநாதனுக்கு தன் வலியையும் மீறி புன்னகை தவழ்ந்தது உதட்டில் “ஹ்ம்ம்ம் என்னமோ பெருசா முறுக்கிகிட்டு போனான்.. இந்த கிழவனுக்கு ஒன்னுன்ன உடனே விழுந்தடிச்சு ஓடி வந்துட்டானே... பரவாயில்ல.. இன்னும் தாத்தா மேல பாசமாத்தான் இருக்கான்... தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சும்மாவா சொன்னாங்க... இதெல்லாம் அந்த பட்டணத்துக்காரிக்கு தெரிய மாட்டேங்குதே...என் பேரனாக்கும்... “ என்று உள்ளுக்குள் கம்பீரமாக சிரித்து கொண்டவர் தன் மீசையை பெருமையுடன் நீவி விட்டு கொண்டார். ஐ.சி.யூ வில

அழகான ராட்சசியே!!-22

Image
  அத்தியாயம்-2 2   அ ந்த OMR சாலையில் தன் ஸ்கூட்டியில் பறந்து கொண்டிருந்தாள் சந்தியா... மணி 8 ஐ நெருங்கி இருந்ததால் சாலையில் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் குறைவாக இருந்தது.. அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் மாலை 6 மணி அடித்தால் கிளம்பி விடுவதால் இந்த நேரம் தனியார் நிறுவனங்களில் அதுவும் பெரும்பாலும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்  தான் தங்கள் வேலையை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்தனர்.. அதுவும் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் நிறைய பேர் கொஞ்சம் சீக்கிரமே வீடு திரும்பி இருக்க வாகன நெரிசல் அவ்வளவாக இல்லை... அதனால் தான் சந்தியா அந்த சாலையில் கண் மண் தெரியாமல் பறந்து கொண்டிருந்தாள்.. அவள் உள்ளே பொங்கிய கோபம் ஆத்திரம் எல்லாம் அந்த ஸ்கூட்டியில் காட்டி முறுக்கி கொண்டிருந்தாள்... பாவம் அதுவும் அவள் கோபத்துக்கு ஈடு கொடுத்து முடிந்தவரை சமாளித்து வந்தது... நல்ல வேளை வாகனம் அதிகம் இல்லாததால் பத்திரமாக ஓட்ட முடிந்தது.. இல்லையென்றால் அவள் உள்ளே பொங்கும் ஆத்திரத்துக்கு கண் மண் தெரியாமல் ஓட்டும் வேகத்துக்கு இந்நேரம் யார் மீதாவது இடித்திருப்பாள்.. முன்னால் வாகனம் எதுவும் அவ்வளவாக இல்

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!