காதோடுதான் நான் பாடுவேன்-37
அத்தியாயம்-37 இ ரண்டு மாதம் கடந்து விட்டது மது தன் புகுந்த வீட்டிற்கு திரும்பி வந்து.. வாழ்க்கை அதன் போக்கில் போய் கொண்டிருக்க, மதுவின் வாழ்வில் அடித்து சென்ற புயல் விட்டு சென்ற சேதாரம் மட்டும் சரியாகாமல் அப்படியேதான் இருந்தது.... வழக்கமாக தன் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்தாள் மதுவந்தினி... நிகிலன் இன்னுமே அவளிடம் பேசுவதில்லை... அவளை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு வெறித்த பார்வைதான்... ஆரம்பத்தில் தன் கணவனின் அவளை நம்பாத அந்த வெறித்த பார்வை அவள் மனதை வலிக்க செய்தது...இப்பொழுது எல்லாம் அதுவும் பழகி விட்டது அவளுக்கு... அதே போல அவளிடம் இருந்த ஒரு துள்ளலும் தன் கணவனை கண்டாலே அலை பாயும் அந்த கண்களும் தொலைந்து போய் விட்டன... அவளிடமுமே ஒரு வெறுமையான பார்வைதான் இருக்கும் அவனை கண்டால்.. தன் மாமியார், நாத்தனார் , ரமணி, தன் பெற்றோர் என்று எல்லோரிடமும் பேருக்காக சிரித்து பேசினாலும் தன் கணவனை கண்டால் அப்படியே ஆப் ஆகி விடுவாள்... சிவகாமியும் இதை கண்டு மனதுக்குள் வேதனை கொண்டார்.. “இவர்களுக்கு தனிமை கொடுத்தால் இந்த பய திருந்துவான் என்று மதுவை விட்டு சுற்றுலா சென்று வர, இவன் ஏதோ பண்ண...