தவமின்றி கிடைத்த வரமே-9
அத்தியாயம்-9 அ டுத்த நாள் கீர்த்தியின் ஆப்ரேஷன்... இன்றும் சிக்கிரம் எழுந்து காலை ஓட்டத்தை முடித்து குளித்து கிளம்பி நேராக பூஜை அறைக்கு சென்றான் வசீகரன்... மீனாட்சி ஏற்கனவே காலையிலயே பூஜை முடித்திருக்க அந்த ஈசன் முன்னே கண் மூடி நின்றான்.. அவன் கண் முன்னே கீர்த்தியின் சிரித்து முகம் வந்து நின்றது.... “அந்த குழந்தையை காப்பாத்திடு ஈஸ்வரா... இந்த ஆபரேசன் சக்ஸஸ் ஆகணும்... “ என்று வேண்டி கொண்டவன் வெளியில் வந்தான்... காலை உணவு தயாராக இருக்க, டைனிங் டேபிலுக்கு சென்றவன் தன் குடும்பத்தாருக்கு புன்னகைத்தவாறு காலை வணக்கத்தை சொல்லி, சிறிது நேரம் தன் தங்கையிடம் வம்பு இழுத்து விட்டு, பின் காலை உணவை முடித்து கிளம்பி சென்றான்…. அவன் கார் நேராக RJS மருத்துவமனைக்கு சென்று நின்றது... தன் காரை நிறுத்தி விட்டு மருத்துவமனையின் உள்ளே சென்றவன் தன் அறைக்கு சென்று தன்னுடைய அசிஸ்டன்ட் ஐ அழைத்து அன்றைய ஆபரேசனுக்கான எல்லா ஏற்பாடுகளையும் ஒரு முறை சரி பார்த்து விட்டு கீர்த்தியை பார்க்க சென்றான்... அங்கு மலர் கோவிலுக்கு சென்று வந்தவள் அந்த திருநீற்றை கொண்டு வந்து கீர்த்திக்கு வைத்து விட்டாள்.. . அதே...