என் மடியில் பூத்த மலரே-16
அத்தியாயம்-16 அ திகாலை.... வெளியில் பனிக்காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது.. பாரதி அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள்... அந்த அறையின் கதவை திறந்து கொண்டு அந்த நெடியவன் உள்ளே வந்தான்.. உள்ளே வந்தவன் அவளின் அருகில் வந்து கையில் கொண்டு வந்திருந்த காபியை அருகில் இருந்த டீபாயில் வைத்தான்... பின் அவளை நோக்கி குனிந்து “ஹே ரதி.. எழுந்திருடீ.. காலைல விடிஞ்சி மணி எட்டாயிருச்சு பார்...இன்னும் என்ன தூக்கம்?? “ என்று அவளை எழுப்பினான் “போ ஆதி... எனக்கும் இன்னும் தூக்கம் தூக்கமா வருது.. நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கனும் “ என்று போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்.. “ஹே!! கும்பகர்ணி... எல்லார் வீட்லயும் பொண்டாட்டி தான் காபி கொண்டு வந்துட்டு புருஷனை எழுப்புவாங்க.. இங்கு எல்லாம் தலைகீழா இருக்கு.. பார்.. உன் புருஷன் நான் வந்து உன்னை எழுப்ப வேண்டி இருக்கு.. எழுந்திருடீ ... “ என்று மெல்ல அவள் மேல் இருந்த போர்வையை இழுத்தான்.. “போடா ஆதி.... நீ எங்க என்னை நைட் எல்லாம் தூங்க விட்ட... தூங்க விடாமல் இம்சை பண்ணிட்டு இப்ப வந்து நான் தூங்கறேன் ங்கிற... “ என்று அவன் இழுத்த போ...