என் மடியில் பூத்த மலரே-8
அத்தியாயம்-8 அ ன்று கார்த்திகை மாத சஷ்டி திருநாள்... கார்த்திகை மாதம் முருகனுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மாதம். ஆறு கிருத்திகா நட்சத்திரங்களின் பெயரால் முருகன் ஆறு குழந்தைகளாக பிறந்தார் முதலில். பின்னர் பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக இணைத்து ஒரு குழந்தையாக்கினார். ஆறு தலையுடன் பிறந்ததால் அவருக்கு ஷண்முகா என்றும் பெயர் வந்ததாம்….முருகன் அவதரித்த மாதம் என்பதால் ஜானகிக்கு இந்த கார்த்திகை மாதம் மிகவும் பிடிக்கும்...ஒவ்வொரு வருடமும் கார்த்திகை விரதத்தை தவறாமல் கடைபிடிப்பார்... அன்றும் ஜானகி காலையில் சீக்கிரம் எழுந்து , குளித்துவிட்டு தன் பூஜையை ஆரம்பித்தார்.. கந்த சஷ்டி கவசத்தை சொல்லி முடித்து, தீபாரதனை காட்டி வழக்கம் போல தன் குறை மற்றும் கோரிக்கையை அந்த வேலனின் காதில் ஓதி விட்டு மெல்ல தீபாரதனை தட்டுடன் வெளியில் வந்தார்... ஆதியும் அதே சமயம் அலுவலகம் கிளம்பி கீழே வந்தான்... பூஜை அறையில் இருந்து வரும் தன் அன்னையின் முகத்தை நோக்கினான்.. ஏனோ அவர் முகம் வாடி இருந்தது.. கடந்த ஒரு மாதம் இருந்த உற்சாகம், அந்த துள்ளல் இன்று மிஸ்ஸிங்... காரணம் அவன் அறிந்ததே... “ஹ்ம்ம்ம்... ஆதித்யா...