தவமின்றி கிடைத்த வரமே-27
அத்தியாயம்-27 அ டுத்த ஐந்தாவது நாள் வசுந்தராவுக்கு வீட்டிற்கு அழைக்கும் விசேஷம் வைத்திருந்தார்கள்... ரொம்ப சிம்பிளாக வீட்டிலயே மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே வைத்து நடத்துவதாக இருந்தது... முதலில் வசு அந்த பங்சனை பற்றி கேட்டதும் முகத்தை சுளித்து அதெல்லாம் வேண்டாம் என்க, பனிமலர் அவளை போனில் அழைத்து அந்த விசேஷத்தின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினாள்.... “வசு குட்டி... நம்மளோட அதுவும் பெண்களோட ஒவ்வொரு வளர்ச்சியையும் எப்படி எல்லாம் கொண்டாடுகிறமோ அதே போலத்தான் இதுவும்.... நீ பிறந்து, தவழ்ந்து, நடந்து, ஓடி, அப்புறம் பள்ளிக்கு சென்ற முதல் நாள் னு அத்தை எத்தனை போட்டோ எடுத்து வச்சிருக்காங்க.. அந்த லிஸ்ட் ல அடுத்து நீ ஒரு மங்கையாக மலர்ந்த தருணம் இது... இதையும் கொண்டாடணும்.... அழகா ட்ரெஸ் பண்ணி விதவிதமா போட்டோ எடுத்து வச்சுக்கணும்... அப்பதான் இதையெல்லாம் பின்னால் திருப்பி பார்த்து ரசித்து சந்தோஷபடலாம்... மற்றவங்க போட்டோவை பார்க்கிறப்போ நமக்கு இப்படி சடங்கு எதுவும் செய்யலையேனு ஏக்கம் உனக்கு வந்திடக் கூடாது... அதனால மறுக்காம இதுக்கு ஒத்துக்கோ... அண்ணி உனக்கு சூப்பர...