Posts

Showing posts from August, 2021

காந்தமடி நான் உனக்கு!!!(final)-49

Image
  அத்தியாயம்-49   ஒரு வருடத்திற்கு பிறகு: “இ ன்னும் ஒரே ஒரு வாய் வாங்கிக்க டா செல்லம்...என் டார்லிங் இல்லை... உன் அம்மு சொன்னா கேட்கணும்...”  என்று கையில் ,  உணவு கிண்ணத்தை வைத்துக்கொண்டு தன் மனையாளின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான் அமுதன்.   நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யாவும் ,  அவளின் நன்றாக மேடிட்டிருந்த வயிற்றை தூக்கிக் கொண்டு மூச்சிறைக்க உண்ண மறுத்து தன் கணவனிடம் இருந்து நழுவி ஓடிக் கொண்டிருந்தாள்.   “ப்ளீஸ் அம்மு...போதும்... இதுக்குமேல் என்னால் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது...”  என்று பாவமாக கெஞ்ச , “சரி டா...நீ இதுவரைக்கும் சாப்பிட்டது எல்லாம் உனக்காக பேபி. இப்பொழுது நம்ம ஜூனியர்க்காக...இன்னும் ஒரே ஒரு வாய் சாப்பிடுவியாம்...”  என்று அவளை செல்லம் கொஞ்சினான் அமுதன்.   “ஆஹான்... இப்படி சொல்லி சொல்லித்தான் இதோடு பத்து தரம் ஊட்டி விட்டிட்டிங்க.  எனக்காக ஒன்று...உங்களுக்காக ஒன்று...என் அம்மாவுக்காக தங்கைக்காக... அத்தை மாமா..”  என்று வரிசையாக பட்டியலிட்டு உள்ளே தள்ளி விட்டீர்கள். அது போதாதாக்கும். இப்ப உங்க ஜூனியர் ம்  சேர்ந்துக்கிட்டாங்களா ? ப்ராட்...இதெல்லாம் சீட்டிங்...”  என்ற

நிலவே என்னிடம் நெருங்காதே!!-5

Image
  அத்தியாயம்-5 அ திரதன ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.. அப்பொழுது மனோகரிக்கு மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்க , இப்பொழுது அதிரதனுக்கு நன்றாக விவரம் தெரிந்து விட குட்டி ரோஜாவாய் கண் சிமிட்டி சிரிக்கும் தன் தங்கையை கண்டதும் அவனுக்கு ரொம்பவும் குசியாகி போனது... அவளுக்கு யாழினி என்று அவனே பெயர் சூட்டினான்..   அந்த பட்டு ரோஜாவை தொட்டு பார்ப்பதும் தூக்கி வைத்து கொஞ்சுவதும் என்று அவளையே சுத்தி வர ஆரம்பித்தான் அதிரதன்.. அமுதினியும் இப்பொழுது வளர்ந்திருக்க , அண்ணா என்று அதிரதனிடம் ஒட்டி கொண்டாள்.. பெரியவளின் அண்ணா என்ற அழைப்பும் சின்ன குட்டியின் பொக்கை வாய் சிரிப்பும் அவனை கட்டி இழுக்க , அவர்களுடனேயே நேரத்தை செலவிட  ஆரம்பித்தான் அதிரதன்.. அதனால் தேவநாதனுடன் செலவிடும் நேரம் குறைய ஆரம்பித்தது.. எப்பொழுதும் தன் தாத்தாவுடன் உறங்குபவன் இப்பொழுது தன் தங்கைகளுடன் உறங்க வேண்டும் என்று அடம் பிடித்ததால் தேவநாதனும் அவனை மனோகரியின் அறையிலயே விட்டுவிட்டார்... தன் பேரனின் போக்கில் மாற்றத்தை கண்ட தேவநாதனுக்கு யோசனையாக இருந்தது.. தன் பேரன் தன் தங்கைகள் மீது பாசமாக இருப்பது சந்தோஷம் த

அழகான ராட்சசியே!!!-11

Image
  அத்தியாயம்-1 1 அ ன்று வெள்ளிக்கிழமை.. வெள்ளிக்கிழமை என்றாலே ஒரு வித உற்சாகம் வந்து ஒட்டிக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும்.. ஏனென்றால் அந்த வாரத்தின் கடைசி நாள் அன்று .. இயந்திர தனமாக காலையில்   எழுந்து அவசரமாக வீட்டு வேலைகளை செய்து , அலுவலகம் வந்து அங்கிருந்த வேலைகளை அதே இயந்திர தனமாக முடித்து   வீடு திரும்பி என ரொட்டீன் வாழ்க்கை தற்காலிகமாக முற்று பெறுவது இன்றோடு.. அடுத்த இரண்டு நாட்கள் ரிலாக்ஸாக இருக்கலாம் என்று எண்ணுகையிலயே வெள்ளிகிழமை அன்றே வார விடுமுறை கொண்டாட்டத்துக்கான உற்சாகம் வந்து ஒட்டி கொள்ளும்... அன்று மட்டும் எல்லாருமே இலகுவாக சிரித்த முகத்துடன் வளைய வருவர்.. அப்படி எல்லாருமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த நாளில் மகிழனுமே காலையில் எழுந்த உடனே அன்று ஏதோ ஒரு புத்துணர்ச்சியுடன் உலா வந்தான்.. உடற்பயிற்சி செய்யும் பொழுதும் அதன் பிறகு குளிக்கும் பொழுதும் என அவனை அறியாமலயே ஒரு உற்சாகம் ஒட்டிக் கொண்டது.. நேற்று ரோகிணி கொடுத்த அறிவுரையின் படி இன்று யோகாசனத்தையும் காலையில் சேர்த்து கொண்டான்.. அவன் முன்பு செய்த சில ஆசனங்களை செய்ய , மனம் இன்னும் லேசாகி புத்துணர்வுடன் இருந்

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!