காதோடுதான் நான் பாடுவேன்-22
அத்தியாயம்-22 அ ன்று இரவு தன் மூத்த மகனுக்காக ஆவலோடு காத்து கொடிருந்தார் சிவகாமி... அந்த போட்டோவை பார்த்ததில் இருந்தே அவர் மனதுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி.. அதுவும் சண்முகத்திடம் பேசிய பிறகு நல்ல குடும்பமாக இருக்க, இந்த பொண்ணே எப்படியாவது தன் மருமகளாக வந்து விட வேண்டும் என்று நொடிக்கொருதரம் அந்த வேலனை வேண்டி கொண்டிருந்தார்... இரவு டைனிங் டேபிலில் மகிழன் ம் அகிலாவும் அமர்ந்து இருக்க, சிவகாமி அவர்களுக்கு எடுத்து வைத்து விட்டு தானும் இரண்டு சப்பாத்தியை தட்டில் போட்டு கொண்டு அமர்ந்தார்... ஆனால் அவர் கண்கள் என்னவோ இங்கில்லை... அடிக்கடி வாசல் பக்கமே சென்று வந்தது... மகிழனும் அகிலாவும் அதை கண்டு கண்ணால் ஜாடை காட்டி என்ன என்று கேட்க இருவருக்கும் ஒன்ரும் தெரியவைல்லை என்றனர் சைகையால்... பின் "ஹ்ம்ம்ம் என்னமா விசேசம் இன்னைக்கு?? உன் அருமை மூத்த மகனை இவ்வளவு ஆவலா எதிர்பார்த்துகிட்டிருக்கீங்க?? " என்றான் மகிழன்... "ஹீ ஹீ ஹீ .. அதெல்லாம் ஒன்னும் இல்லையே... சும்மாதான் டா பார்த்துகிட்டிருக்கேன்.. "என்று சமாளித்தார்.... "நம்பிட்டோமே..... " என்று இருவரும் கோரசாக ராகம்...